பிக் பாஸ் பார்த்தீங்களா.. 'பவாவை' வைத்து கமல் போட்ட பிளான்.. இனிமே தான் இருக்கு ஆட்டமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவி இல்லை,மொபைல் இல்லை, புத்தகம் இல்லை, கதை சொல்ல ஒரு நபர் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது.அதனால் பவா செல்லத்துரை கண்டிப்பாக நான்கு வாரத்திற்கு மேல் தாக்குபிடிப்பார் என்றும் பவாவை வைத்து நிறைய கதைகள் கமல்ஹாசன் சொல்ல வைப்பார் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பவா செல்லத்துரை அருமையான எழுத்தாளர் ஆவார். சிறந்த கதை சொல்லியும் கூட.. யாரையும் தனது கதைகளை மெய் மறந்து கேட்க வைக்கும் வல்லமை உடையவர்.. அவர் முன்பு ஒரு முறை பேட்டியில் சொன்னதை இப்போது நினைவு கூர்ந்தாக வேண்டும். கதை எழுதுவதை போல், கதை சொல்வது என்பதும் அவரது வாழ்க்கையில் தன்னிச்சையாக நடந்த ஒன்றுதானாம்.

Bava Chelladurai will definitely stay for more than four weeks in big boss

நண்பர்களுடன் உரையாடும் போது, உரையாடல்கள், நிகழ்வுகளில் பேசுவது இப்படி எதில் என்றாலும் கதைகள் இல்லாமல் பேச முடியாது என்று பவா செல்லத்துரை சொல்லியிருக்கிறார். இன்றும் யூடியூப்பை திறந்து போய் பவா செல்லத்துரையின் கதை சொல்லும் விதத்தை நீங்கள் தாராளமாக பார்க்க முடியும்.

பவா செல்லத்துரையின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். இவர் சிறந்த எழுத்தாளர், பதிப்பாளர், கதை சொல்லியும் மட்டுமல்ல சிறந்த மொழி பெயர்பாளரும் கூட. இவரது மனைவி கே. வி. ஷைலஜாவும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஆவார்.. இவரது மனைவியின் அக்கா கே. வி. ஜெயஸ்ரீ, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புகான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் ஆவார்.

Bava Chelladurai will definitely stay for more than four weeks in big boss

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை,நீர் மற்றும் கோழி, எல்லா நாளும் கார்த்திகை என பல சிறுகதைகள், நூல்களை எழுதி உள்ளார் பவா செல்லத்துரை. பவா செல்லத்துரையையை நடிகராக ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ உள்ளிட்ட படங்களில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சிறந்தகதை சொல்லியான இவரது திறமையை பலரும் பார்க்க போகிறார்கள்.

பிக்பாஸ் என்றாலே மேட்டுக்குடி கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இடமாகவே பார்க்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தில் சாமானியர்களின் குரல்களை வலிமையாக பதிவு செய்தவர், கதை சொல்லியாக செல்லும் போது, பல விஷயங்கள் மக்களுக்கு போய் சேர வாய்ப்பு உள்ளது.

Bava Chelladurai will definitely stay for more than four weeks in big boss

பவா செல்லத்துரை உள்ளே வரும் போதே, வயதான இவரை எல்லாம் ஓரிரு வாரத்திலேயே வெளியேற்றி விடுவார்கள் என்று தான் பிக்பாஸ் பிரியர்கள் கூறினார்கள்.ஆனால் பல ஆளுமைகள், எழுத்தாளர்கள், பவாசெல்லத்துரை முகத்தை பிக்பாஸில் பார்த்த போது மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல் ஒருவரை பிக்பாஸில் கொண்டு வந்ததன் பின்னணில் கமல்ஹாசன் தான் இருப்பார் என்று அப்போதே பலரும் சொன்னார்கள்.

இந்நிலையில் பவா செல்லத்துரை போன உடனேயே தனது பணியை ஆரம்பித்துவிட்டார். பிக்பாஸில் டிவி இல்லை,மொபைல் இல்லை, புத்தகம் இல்லை,கதை சொல்ல ஒரு நபர் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது. உடனே உட்கார்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த எபிசோட்களில் பவா செல்லத்துரையின் கதைகள் ஆரம்பம் ஆகி உள்ளன. இதை பார்க்கும் போது பவா கண்டிப்பாக நான்கு வாரம் தாக்குபிடிப்பார் என்றும் பவா அவர்களை வைத்து நிறைய கதைகள் கமல் சொல்ல வைப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+