Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதி பாஸ்கருக்கு வந்த அந்த போன்.. "நான் சி.எம். பேசறேன்".. வெடித்து சிரித்த காமாட்சி.. என்ன நடந்தது

பாரதி பாஸ்கர், கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் முதலமைச்சர் பேசறேன்" என்று சொன்னதுமே, நான் ஆச்சரியப்பட்டு போனேன், கலைஞரிடம் பெற்ற பண்பு இது" என்று பாரதிபாஸ்கர் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் வேருக்கு விழா கூட்டம் நடைபெற்றது.. இதில், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அப்போது, இதில் பங்கேற்று புகழ்பெற்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உரையாற்றினார்.. அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.. பாரதி பாஸ்கர், விழாவில் கருணாநிதி குறித்து பேசியதன் சுருக்கம் இதுதான்:

 கோபாலபுரம்

கோபாலபுரம்

"என் வீடு கோபாலபுரத்தில் இருக்கிறது.. ஆனால் நான் கலைஞரை ஒருமுறை கூட சந்தித்து இல்லை.. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் நான் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.. மறுநாளே, ஒரு டாக்டர் போன் பேசிட்டே என்னிடம் ஓடிவந்தார்.. இந்தாங்க பேசு என்று போனை தந்தார்.. நான் ஹலோ என்றேன்.. 'நான்தான் முதலமைச்சர் பேசறேன்" என்றார் ஸ்டாலின்.. என்னால் நம்ப முடியவில்லை.. நான் அரசியல்வாதி இல்லை.. புகழ்பெற்ற நட்சத்திரமும் கிடையாது.. நான் ஒரு பேச்சாளர்.. அவ்வளவுதான்.. என்னை நலம்விசாரித்தபோது, நான் ஆச்சரியப்பட்டு போனேன்.. இந்த பண்பு கலைஞரிடம் இருந்து அவர் பெற்றது.

கேமராமேன்

கேமராமேன்

ஒருமுறை தூர்தர்ஷனில் கலைஞர் பற்றி படம் எடுக்க போகிறார்கள்.. அதற்கு என் நண்பர்தான் கேமராமேன்.. கோபாலபுரம் சென்றார் அந்த கேமராமேன்.. அங்கே நின்றிருந்த ஸ்டாலின் சாரை காட்டி, :"ஐயா, நீங்க ஸ்டாலின் சாரை பார்த்து நடந்து வந்தால், படம் எடுக்க நல்லா இருக்கும்" என்றார்.. உடனே கலைஞர், ஸ்டாலின்சார்தான் என்னை பார்த்து நடந்து வரணும்.. நான் அவர பார்த்து நடக்ககூடாது என்று கிண்டலாக கூறினாராம்.

காமாட்சி

காமாட்சி

கலைஞர் ஒரு பேச்சாளராக பேசுகிறபோது, விஞ்ஞான விதியையும் விஞ்சி நிற்பார்.. ஏன் என்றால், ஒரு பந்து அவரிடம் வீசப்பட்டால், வீசப்பட்ட அது வேகத்தை விட, கூடுதல் வேகத்தில் பதில் வந்து சேரும்.. முதல்வராக கலைஞர் சட்டமன்றத்தில் இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவராக ஜி.காமாட்சி இருக்கிறார்.. அப்போது, காமாட்சி எழுந்து ஒரு கேள்வி கேட்கிறார்.. "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? எவ்வளவு வைர நகைகள் இருக்கிறது? என்று கேட்டார்.. உடனே கலைஞர் எழுந்து பதில் சொல்கிறார், "மீனாட்சிக்கு இருக்கிற சொத்துக்களை சொன்னால், காமாட்சிக்கு பொறாமை வந்துவிடும்" என்றாராம்.. இதைக்கேட்டு, காமாட்சி வெடித்து சிரித்துவிட்டார்.

 ஐயா.. தேர்தல்

ஐயா.. தேர்தல்

இப்படித்தான் ஒருமுறை, பக்தவத்சலம் சட்டமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்தார்.. அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.. அப்போது எழுந்து பேசிய பக்தவத்சலம், "ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் இல்லையே என்ற கவலை மட்டும்தான் எனக்கு இருக்கிறது என்றாராம்.. உடனே கலைஞர், .. "ஐயா.. 67-ல் தேர்தல் வருகிறது.. அது வந்தபிறகு உங்கள் கவலை தீர்ந்துவிடும்.. ஏனென்றால், அப்போது ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக நீங்களே இருப்பீர்கள்" என்றாராம்.. இதைக் கேட்டு பக்தவத்சலம் மகிழ்ந்து சிரித்தாராம்..

 சிதம்பரம் - நடராஜன்

சிதம்பரம் - நடராஜன்

என் நண்பர் பெயர் இலக்கிய நடராஜன்.. அவர் கலைஞரிடம் பணி செய்து கொண்டிருந்தார்.. பிறகு, ப.சிதம்பரத்திடம் பணியாற்ற வாய்ப்பு வந்தது.. எனவே, இதை கலைஞரிடம் சொல்லிவிட்டு போவற்காக வருகிறார்.. இங்கிருந்து இன்னொரு தலைவரிடம் பணிபுரிய போவதை கலைஞரிடம் எப்படி சொல்வது என்று தயங்குகிறார்.. பதட்டமாக வருகிறார்.. "ஐயா, நான் சிதம்பரத்திடம் வேலை செய்யலாம்னு இருக்கேன் என்றாராம்.. அதற்கு கலைஞர் ஒருநொடிகூட தயங்காமல், "நடராஜன் சிதம்பரத்திடம்தானே இருக்க வேண்டும்" என்றாராம்.. இதெல்லாம் கலைஞரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு" என்று பாரதி பாஸ்கர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+