அத்தனை பேர் பார்க்கும் போது.. நடிகையின் இடுப்பை தடவிய நடிகர்! கோபத்தில் நடிகை எடுத்த முடிவு!
சென்னை: பிரபல போஜ்புரி நடிகர் ஆன பவன் சிங் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சக நடிகையான அஞ்சலி ராகாவின் இடுப்பை தொட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சினிமா உலகில் இருந்தே விலகுவதாக நடிகை அஞ்சலி கூறியிருக்கும் நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக பவன் சிங் கூறி இருக்கிறார்.
இந்திய அளவில் பாலிவுட் கோலிவுட் போன்று போஜ்பூரி படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான போஜ்பூரி திரைப்படங்கள், திரையரங்குகளுக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றன. அதே நேரத்தில் அடிக்கடி போஜ்பூரி நடிகர்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அப்படித்தான் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் பவன் சிங். போஜ்பூரியில் 'சாயா சேவா கரே' உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்திருப்பவர். மொக்கையான சண்டை காட்சிகள் இருந்தாலும் கிராபிக்ஸில் பட்டையை கிளப்புவது பவன் சிங்கின் வழக்கம்.

போஜ்புரி சினிமா
இந்த நிலையில் சமீபத்தில் பவன் சிங்கும் நடிகை அஞ்சலி ராகா என்பவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், பட குழுவினர் பங்கேற்றிருந்தனர். அந்த விழாவில்தான் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது.
போஜ்புரி நடிகர்
இந்நிகழ்ச்சியில் அஞ்சலி பேசிக் கொண்டிருந்த போது, திடீரென பவன் சிங் அவரது இடுப்பைத் தொட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும், அஞ்சலி வெளியே சிரித்துக் கொண்டே மீண்டும் பேசினார். ஆனால், பவன் சிங் மீண்டும் அவரது இடுப்பில் கை வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி அங்கிருந்து கிளம்பினார். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பவன் சிங்
இந்த நிலையில் நடிகர்கள் எப்போதும் இப்படித்தான், இதனால் சினிமா உலகில் இருந்தே வெளியேறுகிறேன் எனக் கூறி அதிர வைத்தார் அஞ்சலி. இதற்கிடையே மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் பவன் சிங்குக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை அடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது செயல் அஞ்சலியைப் பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் பவன் சிங்.
மன்னிப்பு கேட்டார்
மேலும் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்யவில்லை எனவும், அவரது உடையில் பிரைஸ் டாக் இருப்பதாக நினைத்து அதனைத் தொட்டதாகவும், அஞ்சலி சங்கடப்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் பவன் சிங் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாகவும், தற்போது பிரச்சனை வந்ததால் சமாளிப்பதாகக் கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications