வந்துருச்சு மெசேஜ்.. சார் பதிவாளர் ஆபீசுக்குள் "இவங்க" வரக்கூடாது: தமிழக பத்திர பதிவுத்துறை ஒரே போடு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக பத்திரப்பதிவு துறை பல்வேறு அதிரடிகளை செய்து வரும்நிலையில், பத்திரப்பதிவு துறை, மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
சமீபத்தில், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும், ஆன்லைன் முறையில் குடிமக்களுக்கான நுழைவு வசதியை பயன்படுத்தி, சொத்து பரிமாற்ற விபரங்களை, அடையாள விபரங்களை பொதுமக்களே உள்ளீடு செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதிவுத்துறை: இதற்கு காரணம், எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுவதால், இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை..
அத்துடன், பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆவண எழுத்தர்கள்: ஆனால், சரியான வழிகாட்டி மதிப்பை குறிப்பிடுவது, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஆவண எழுத்தர்களின் உதவி தேவைப்படுகிறது என்பதால், ஆவண எழுத்தர்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்று மற்றொரு சாரார் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு, ஆன்லைன் வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்நிலையில், மற்றொரு அதிரடியை பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது.. சார் பதிவாளர் அலுவலகங்களில், ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும், லஞ்ச புகார்கள் தொடர்ந்தபடியே உள்ளன.. இதையடுத்து, வெளியாட்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, மாவட்ட பதிவாளர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது..
பதிவுத்துறை: அப்போதுதான், சார் பதிவாளரின் உறவினர்கள், நண்பர்கள் என்ற அடிப்படையில், தரகர்கள் நடமாடுவது தெரியவந்தது. எனவே, இதற்கும் ஒரு கடிவாளத்தை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.. அதில், "சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெருத்த நிம்மதி: இந்நிலையில், சார் பதிவாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரையும், தன்னிச்சையாக எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் வாயிலாக, இதை கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பதிவுத்துறையின் இந்த அதிரடி உத்தரவால், லஞ்சப்புகார்கள் இனி வெகுவாக குறையும் என்று நம்பப்படுகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications