Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் அதிரடி.. இந்த மாசம் கரண்ட் பில் கட்டிட்டீங்களா? வித்தியாச தொகை செலுத்த மெசேஜ் வந்ததா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்களையும் அவர்களின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வருகிறது. என்ன காரணம்?

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்கட்டணங்களை ஆன்லைனிலேயே பெரும்பாலானோர் செலுத்தி வருகிறார்கள்.. மின் கட்டணத்தை மின் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும், ஆன்லைன் செயலி வாயிலாகவும் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. ஆனால், இதை பயன்படுத்தி சில மோசடிகளும் துவங்கியிருக்கின்றன.

tneb tamil nadu electricity board electricity bill

சமீபத்தில் மின் நுகர்வோர்களுக்கு, "உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துங்கள்" என்று போலியான குறுஞ்செய்தி பரவியது.. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை பதிவிட்டிருந்தது.

மின்இணைப்பு: அதில், "நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின்கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்தபட்ச ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர்.

பதற்றப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.inமற்றும் செயலியில் சரிபார்க்கவும். எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டாம். இதுதொடர்பாக, சைபர் குற்ற எண 1930-ல் புகார் அளிக்கவும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு பிறகே இதுபோன்ற மோசடிகள் மெல்ல மெல்ல குறைய துவங்கியிருக்கிறது.

இணைப்புகள்: இதனிடையே, தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.

எனவே, மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாக வைத்து, குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து, கஸ்டமர்களுக்கு SMS மெசேஜ் அனுப்பி வருகிறது..

குடியிருப்புகள்: அதில், "மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த தகவலை, நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி அளவில் உள்ளது.. எனவே, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர். அந்தவகையில், நம் மாநிலத்தில் தற்போது தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+