"சமாதானம்" ஆக மாட்டேன்.. அவங்க சொத்துக்களை முடக்குங்க.. எஸ்பி.க்களிடம் சீறிய ஸ்டாலின்.. என்னாச்சு?
முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்
சென்னை: போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கிளர்ச்சியை தடுக்க முடியவில்லை, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிமுக குற்றச்சாட்டுகளை கூறியதுடன், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.
அதுபோலவே பாமகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.. பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

ஆபரேஷன்
இதையடுத்து, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து போதைப் பொருட்கள் பிடிபட்டு வரும் நிலையில், இவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்தினார்.

கலெக்டர்கள்
இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் துவங்கியது.. அப்போது, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

சமாதானம்
போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.. மேலும் மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் சில உத்தரவுகளையும் பிறப்பித்து பேசியதாவது: "போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.. தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். போதைப்பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

அடங்காத வியாபாரிகள்
பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.. போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல. சமூக பிரச்சினை.. போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும். மேலும், போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும்.. உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்" என்று கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications