பீகார் தோல்விக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை! அது முழுக்க முழுக்க! காங்கிரஸ் நிர்வாகி அட்டாக்
சென்னை: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அனைத்து தூண்களும் காம்பரமைஸ் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு வேலை செய்தது என காங்கிரஸ் நிர்வாகி ஆலிம் அல் புகாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும் என்றும், பீகார் தேர்தல் தோல்வி என்பது ஜனநாயகத்தின் தோல்வி. பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இல் வெற்றி பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்த சூழலில் பாஜக வெற்றி பெற தேர்தல் ஆணையம் உழைத்ததாகவும், பீகார் தேர்தல் காங்கிரசின் தோல்வி அல்ல.. ஜனநாயகத்தின் தோல்வி எனவும் வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணியின் துணைத் தலைவருமான ஆலிம் அல் புகாரி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பஹல்காமில் அட்டாக் நடந்து மக்கள் ரத்தக்கறையோடு கிடக்கும் போது கூட, பீகாரில் தேர்தல் நடக்கின்றது என்பதால் அங்கு சென்று மோடி அழுகிறார். இந்த மாதிரியெல்லாம் எங்களால் பண்ண முடியாது. தேர்தலை தேர்தலாக சந்திக்கிறோம். ஜனநாயகத்தை ஜனநாயகமாக பார்க்கிறோம். ராகுல் காந்தியை ஜனநாயகத்தின் தலைவராக பார்க்கிறோம்.
இந்த அரசியில் அமைப்பு சட்டத்தின் அனைத்து தூண்களும் காம்பிரமைஸ் ஆகிவிட்டார்கள். மத்திய புலனாய்வு முகமையாக இருக்கட்டும், நீதிமன்றங்கள் கூட ஒரு சில நேரங்களில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழல் வந்துவிட்டது. பிரபல பத்திரிக்கை ஒன்றே காங்கிரசுக்கு எதிராக செயல்படுகிறது. இப்படி எல்லாரையும் காம்பிரமைஸ் பண்ணிட்டாங்க.. கடைசியாக இருந்தது தேர்தல் ஆணையம். அதுவும் போயிருச்சு.. அதிலும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எல்லாம் சுத்தம்.. முழுக்க நனைந்ததற்கு பிறகு எதற்குங்க முக்காடு என்கிறது போல ஆகிட்டாரு..
இப்படி இருக்கும் சூழலில் பீகாரில் ஏற்பட்ட தோல்வி என்பது ஜனநயகத்தின் தோல்வி தான். பீகார் தோல்விக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
பீகாரில் நடந்தது போன்று எஸ்.ஐ.ஆரை அனுமதித்தால் இதே நிலைமை தான் நடக்கும். இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
பீகாரில் என்ன உள் கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக தலைவர்கள் யாராவது சொல்லி கேட்டு இருக்கீங்களா.. இப்போது பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதுக்கு பூரண மதுவிலக்கை செயல்படுத்தியது தான் காரணம் என சொல்கிறார்கள். ஆனால் பூரண மதுவிலக்கு இருக்கும் இங்கே தான் 28 பேர் இறந்துவிட்டார்கள். ஆனால் இதற்கு ஒரு பதிலோ, பொறுப்புணர்ச்சி கூட செய்யவில்லையே ஏன்.. என்று கூறினார்.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications