சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக்.. நூலிழையில் தப்பி.. கதறிய இளைஞர்!
சென்னை: சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். தனது கண் முன்னே பைக் தீப்பிடித்து எரிவதை கண்டு அவர் கதறி துடித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்தவர் ஐசக் . இவ 5 வருடங்களுக்கு முன்பு கே.டி.எம் 200 ரக இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஒரு வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியின் இன்ஜீன் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐசக் தனது வாகனத்தை வீட்டிலேயே நிறுத்திவிட்டார்.

கேடிஎம் பைக்
ஒரு வருடத்திற்கு தன் பைக்கை பழுது பார்க்க விரும்பிய ஐசக், அதனை ஷோரும் சென்று கொடுத்துள்ளார். சுமார், ரூ. 60,000 செலவழித்து பைக்கை ரிப்பேர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. பழுது பார்த்த பிறகு, ஐசக் பைக்கை வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அடுத்த நாளே, பைக் மீண்டும் பழுதாகி உள்ளது.

சர்வீஸ் சென்டர்
இதனால், ஐசக் மீண்டும் பைக்கை பழுது பார்க்க சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே, ஒன்றும் பிரச்னையில்லை என்று கூறி, பைக்கை சிறிய வேலைகளை பார்த்துவிட்டு கொடுத்து அனுப்பி உள்ளார்கள் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்கள்.

தீப்பிடித்தது
இதையடுத்து வாகனத்தை எடுத்துக்கொண்டு ஐசக் வந்துள்ளார். அவர் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென சறுக்கி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் பைக் தீ பற்றி எரிந்தது. நல்ல வேலையாக ஐசக் நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் பைக் கொழுந்து விட்டு எரிந்தது, வெறும் கூடு மட்டுமே மிஞ்சியது.

கோடம்பாக்கம்
தகவல் அறிந்து சென்னை தியாகராய நகர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கோடம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென வாகனம் தீப்பிடித்த காரணத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications