விண்ணை முட்டிய வீரவணக்கம்.. ஜெய்ஹிந்த்.. தமிழகத்தின் ரத்தத்தில் ஊறியது தேச பக்தி! நெகிழ்ச்சி வீடியோ
நாளை ஒருநாள் ஊட்டியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாகனங்களுக்கு, பொதுமக்கள் சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்திய வீடியோ ஒன்று, இணையத்தில் நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.
எந்தவித இயற்கை சீற்றங்களுக்கும் உட்பட்டவர்கள் இல்லை நம் ராணுவ வீரர்கள்.. குளிர்பிரதேசம், சதுப்புநிலம், கடல்பிரதேசம், பாலைவன பிரதேசம் எத்தகைய மோசமான சூழ்நிலை வந்தபோதும் நம் தாய்நாட்டை காக்கும் பணியை செய்பவர்கள்..
அதனாலேயே ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும், துணை நிலை ராணுவப்படை வீரர்களுக்கும் நாம் இன்றுவரை நம் மரியாதையை செலுத்தி வருகிறோம்...

தேசபக்தி
ராணுவ வீரர்கள் என்பவர்கள், வெறும் இந்திய அரசு பணியாளர் மட்டுமல்ல, இந்த தேசத்தையே தன் தோளில் சுமக்கும் மாவீரர்கள்.. சகமனிதனுக்கு கிடைக்கக்கூடிய சாதாரண அடிப்படை சந்தோஷங்களை கூட தனக்குள்ளே அழுத்தியும், அமுக்கியும் வைத்து கொண்டு, தன்னை மெழுகாக உருக்கி கொண்டவர்கள்..

கிரிக்கெட்
ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்போதெல்லாம், நம்மையும் அறியாமல் நம் தேசப்பற்று வெளிப்பட்டு கொண்டுதானிருக்கிறது... அவ்வளவு ஏன், கிரிக்கெட் விளையாட்டின்போதும், மக்களவையின் தேர்தலின்போதும் நாடி நரம்புகளை புடைத்து கொண்டு வெளிப்பட்டு விடுகிறது இந்த தேசபக்திதான்.. நாட்டுப்பற்று என்று வந்துவிட்டால் பிராந்திய உணர்வுக்கு அங்கு இடமில்லை.. ஒருவர் இந்தியராகவே இருந்தாலே போதும், அவருக்கு தேசப்பற்றை சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
|
பெண்கள்
ஆக்கப்பூர்வமான தேசபக்தி என்பது நாம் வாழும் இடம், நகரம், மாவட்டம், மாநிலம், இப்படி எங்கு இருக்கிறோமே, அந்த மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதும், அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதிலும்தான் அடங்கி உள்ளது.. இதுவே ஜனநாயக தன்மையாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும், பெண்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கண்ணியத்துடன் வாழ உதவுவதே தேசபக்தி... மொழி, சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு பரஸ்பர மரியாதையை ஊக்குவிப்பதும் தேச பக்திதான்.. இவை அனைத்தையும் நம் ராணுவ வீரர்களுக்கு இன்றுவரை நாம் அள்ள அள்ள குறையாமல் தந்து கொண்டிருக்கிறோம்.

ஹெலிகாப்டர்
அப்படித்தான் இன்றும் தந்துள்ளோம்.. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மலை மீது மோதியதில், அவரும் அவருடைய மனைவி மற்றும் 12 பேர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நாட்டு மக்கள் இன்னமும் மீளவில்லை.. அதிலும் நம் தமிழகத்தில் இப்படி ஒரு விபத்து நடந்துள்ளதை ஜீரணிக்கவே முடியவில்லை.. இந்த வீரர்களின் உடல்கள், டெல்லி கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன..

விமானபடை
முன்னதாக, இவர்களின் உடல்களை வேனில் ஏற்றி சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. அப்போது ஒரு இடத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. அது ஒரு குறுகலான சாலை.. சாலையின் இரு பக்கமும் மக்கள் குழுமி உள்ளனர்.. அங்கிருந்த கடைகள், அருகில் இருந்த வீடுகளில் பொதுமக்கள் நிரம்பி வழிகின்றனர்.. ராணுவ வீரர்களின் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவதால், அதற்கு சல்யூட் வைக்க அனைவரும் கால்கடுக்க காத்து நின்றுள்ளனர்..

பதட்டம்
பிறகு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வர ஆரம்பிக்கிறது.. மக்கள் கூட்டத்திடம் ஒரு அசாதாரண தோற்றம் தென்படுகிறது.. பலர் பதட்டமடைகிறார்கள்.. பலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.. வாகனங்கள் அருகில் வந்ததும் வீர வணக்கம் என்ற சொல்லை உதிர்க்க ஆரம்பிக்கின்றனர்.. அடுத்த ஒருசில வினாடிகளில் அந்த பகுதி மொத்தமும் வீரவணக்கம் என்ற ஒற்றை சொல் சூழ்ந்து கொண்டு விண்ணை முட்டுகிறது.. வரிசையாக வந்த வாகனங்களுக்கு தாங்கள் கையில் வைத்திருந்த பூக்களை தூவுகிறார்கள்.

சல்யூட்
உணர்ச்சிபெருக்குடன் சல்யூட் அடித்து ஜெய்ஹிந்த் என்று நரம்பு புடைக்க உச்சரிக்கிறார்கள்.. வாகனங்கள் அனைத்தும் அவர்களை கடந்து செல்லும்வரை, ஜெய்ஹிந்த் வார்த்தை அந்த பகுதியில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.. இதுதான் நம் தேசபக்தி.. இது யார் சொல்லியும் நமக்கு ஒரு நிமிடத்தில் வந்துவிடாது.. நம் ரத்தத்தில் இயல்பிலேயே ஊறி இருப்பது.. இந்த தேசபக்தியும் ஒற்றுமையும்தான் நம்மை இன்று வரை அன்னிய சக்திகளிடம் இருந்து பிரித்துவிடாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறது... "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா" என்று கேட்பவர்களால், இப்படிப்பட்ட தேசபக்தியை புரிந்து கொள்ள முடியாதுதான்..!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications