அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு வார்னிங்.. தேசிய ஜனநாயக கூட்டணி பாதுகாக்க பாஜக தலைமை அதிரடி முடிவு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் உறவுகளைப் பாதுகாக்கும் விதமாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எதிராகக் கட்சி உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகளை சகித்துக் கொள்ள கூடாது என்றும், அப்படி பதிவுகளை வெளியிடுவோம் என்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பிரிவுக்கு பாஜக தலைமை அதிகாரியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, , திருவள்ளூரைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஜானி ராஜா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஒரு மீம் வெளியிட்டதற்காக, அவரைப் பதவியில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக நீக்கினார்.

முன்னதாக நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி ஜானிராஜா வெளியிட்ட மீம்ஸ் பதிவில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த மீம் எடப்பாடி பழனிச்சாமியை சவப்பெட்டியில் கிடத்துவது போல் சித்தரித்திருந்தது. அதனால் தான் ஜானியை பாஜகவில் இருந்து நீக்கி உள்ளனர் .
முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ஆதரவாளரான ஜானி ராஜா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டதற்காக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை எந்த வழியிலும் சகித்துக் கொள்ள கூடாது என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டது. ' அந்த அடிப்படையில் தான் ஜானி ராஜா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக மூத்த பாஜக நிர்வாகி தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் சமீபத்தில் டெல்லிக்குச் சென்றபோது, கட்சியின் மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் செய்யும் செயல்கள் குறித்து சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பயாஜயந்த் பாண்டா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக பேசிய பாஜக முகூர்த்த நிர்வாகி ஒருவர், "கூட்டணித் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பதிவிடுபவர்கள் அல்லது கட்சியின் கோட்பாட்டிலிருந்து விலகிச் செல்பவர்கள் என 18 கட்சி உறுப்பினர்களின் பட்டியலை மாநிலப் பிரிவு தயாரித்துள்ளது. இப்போதைக்கு மாநிலப் பிரிவு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது," என்றார்.
தேசியத் தலைமை, தமிழகப் பிரிவை தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கட்சிக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் விரும்புவதாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பயாஜயந்த் பாண்டா , சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தபோது, கட்சியின் "வார் ரூம்" நடத்தும் நபர்களைச் சந்தித்து ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார். கட்சியால் நிதி அளிக்கப்படும் வார் ரூம் பிரிவுகள், கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும், இல்லையெனில் நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்த திருவள்ளூர் பாஜக நிர்வாகி ஜானி ராஜா நீக்கப்பட்டது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் உட்பட ஒரு பிரிவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த பாஜக தலைவர், அண்ணாமலையின் திமுக மீதான கடுமையான விமர்சனங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் பார்வைத் தன்மையையும் வரவேற்பையும் பெற உதவியதாகக் கூறினார். ஆனால், அதிமுகவுடன் மிக நெருக்கமாகச் செல்வதன் மூலம் பாஜக தனது தனிப்பட்ட குரலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் இவலை தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் . எனினும் அவை உட்கட்சி விவாதங்கள் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் பொதுவெளியில் வருவது நல்லதல்ல என்றும் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படையான அதிருப்தி கட்சியின் பணிகளை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications