திராவிட அரசியலை முன்னெடுக்கிறதா பாஜக.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஜெயிச்சாகணும்.. டெல்லி ஆர்டர்

திராவிட கட்சிகள் போலவ கள பணிகளை மேற்கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாங்க சும்மா நின்னாலே 60 சீட்களில் அசால்ட்டாக ஜெயிப்போம்" என்று எல்.முருகன் சொன்னதற்கு பின்னால் ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. கிட்டத்தட்ட பிரதமர் மோடி - அமித்ஷாவின் மாஸ்டர் ஸ்டிரோக் வேலை என்றுகூட இதை சொல்லலாம்.

எத்தனையோ மூத்த தலைவர்கள் தமிழகத்தில் இருந்தும், இத்தனை நாள் பாஜக என்ற கட்சி எங்கிருந்தது, எத்தனை இடங்களில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தை பிடித்தது என்பது கண்டுபிடிக்கவே முடியாத ஒன்றாகத்தான் கடந்த கால அரசியல் இருந்தது... இதை நோட்டாவும் வெளிப்படுத்தியவாறே இருந்தது.

தமிழிசை என்ற ஒற்றை மனுஷியின் வீரியத்தால், பாஜக துளிர்த்தது உண்மைதான்.. மலராத தாமரையை மலர்ந்துவிட்டது போன்ற ஒரு மாயையை தமிழிசை சவுந்தராஜன் ஏற்படுத்தியதற்கான உழைப்பும், அர்ப்பணிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.

அதிருப்தி

அதிருப்தி

அதோடு சரி.. அதற்கு பிறகு பாஜக என்றாலே அதிருப்திகளுக்குள் நிறைந்து போயிற்று.. தமிழக மக்கள் எதிர்ப்பை அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது.. மத்திய அரசின் கொள்கைகள், அறிவிப்புகள் இப்படி எதுவுமே நலன் பயப்பதாக இல்லை.. இதை இங்கிருக்கும் மாநில பாஜக தலைமையும் தட்டி கேட்டு கேள்வி எழுப்ப வில்லை.. இந்த நெருக்கடி சமயத்திலும், குறைந்த பட்சம் பிஎம் கேர் நிவாரண நிதியில் இருந்து 10 பைசாவைகூட வாங்கி தரவில்லை.

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

மாறாக, மாற்று கட்சியில் இருக்கும் அதிருப்தி மூத்த தலைகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் முயற்சியில் இறங்கியது.. இன்னொரு பக்கம் நேற்று வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை போன்றோருக்கு சீட் தந்து உயர்த்தி பிடித்தது.. இதற்கு நடுவில் ரஜினியை இன்னமும் வழிக்கு கொண்டு வர முடியாமல் திணறியும் வருகிறது.

 60 சீட்கள்

60 சீட்கள்

இப்படிப்பட்ட சமயத்தில்தான், எல். முருகன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. நாங்க சும்மாவே 60 சீட்களில் ஜெயிப்போம் என்றார்.. இதன் அர்த்தம், அதிமுகவிடம் தங்களுக்கு 60 சீட்களை ஒதுக்க வேண்டும் என்று நூல் விடுவதாகவே பார்க்கப்படுகிறது.. இவ்வளவு சீட் வேண்டும் என்று பேரம் பேசுவதுபோலவே இந்த பேட்டி எடுத்து கொள்ளப்பட்டது.. அதுமட்டுமில்லை, வழக்கு போடவேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ளோர் மீது தான் போட வேண்டும் என்று பொடி வைத்தும் பேசியிருந்தார்.

 திமுக - அதிமுக

திமுக - அதிமுக

முருகன் இப்படி பேசுகிறார் என்றால், பாஜக மேலிடத்தின் காய் நகர்த்தல் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதில் முதல் விஷயமாக, தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி அப்படியே திராவிட கட்சிகளை போல தேர்தலில் களமிறங்க போகிறதாம்.. அதாவது, திமுக, அதிமுக தேர்தல் சமயங்களில் என்னென்ன வியூகங்களை கையில் எடுக்குமோ அது முதல், தேர்தல் பணி வரை எல்லாமே திராவிட கட்சிகளின் ஸ்டைலை பின்பற்ற போவதாக கூறப்படுகிறது.

ஊர்வலங்கள்

ஊர்வலங்கள்

அடுத்ததாக, இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் எங்கு, எப்படி சறுக்கினோம், யார் காரணம் என்பதையும் கண்டறிந்து அதை தகர்க்கும் முயற்சியல் இறங்கியுள்ளது.. உதாரணத்துக்கு, பூத் கமிட்டி அமைப்பதில், கடந்த காலங்களில் ஏமாற்றியதுபோல் இந்த முறை ஏமாற்ற முடியாத அளவுக்கு, டெக்னிக்கல் விஷயங்களை கையில் எடுத்துள்ளதாம். இதைதவிர, முக்கிய நகரங்களில் 5 ஆயிரம் பைக்குகளில் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் போன்றவை நடத்தவும் திட்டம் உள்ளதாம்..

 சீட் பேரம்

சீட் பேரம்

இதையெல்லாம் சரியாக களைந்துவிட்டால், குறைந்தது 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மோடி- அமித்ஷா- நட்டா ஆகியோர் முடிவு செய்துள்ளார்களாம்.. இந்த சீட்டுகளை அதிமுகவிடம் வாங்கி தருவது தங்கள் பொறுப்பு என்றும், அப்படி தரப்படும் 20 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு இந்த முறை தமிழக பாஜக செல்ல வேண்டும் என்றும் சொல்லி உள்ளார்களாம்.. இதற்கான கட்சிக்குள் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வதற்கு முருகனுக்கு அனுமதியுடன் சுதந்திரமும் தந்துள்ளார்களாம்.

 பொறுப்பு

பொறுப்பு

இதற்கு காரணம், முருகனின் செயல்பாடுகள் பாஜக தலைமையை திருப்திப்படுத்தும் வகையிலேயே இருந்து வருகிறது.. மாற்று கட்சியில் உள்ளவர்களுக்கு ஸ்கெட்ச் போடுவது முதல் தன் கட்சியில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு உரிய பொறுப்பு தருவது வரை எல்லாமே சிறப்பாக முருகன் செய்து வருவது அவர்களை கவர்ந்துள்ளது.

 கந்த சஷ்டி

கந்த சஷ்டி

எல்லாவற்றிற்கும் மேலாக, திமுகவை ஏற்கனவே முரசொலி விவகாரத்தில் டஃப் கொடுத்து கேள்வி எழுப்பியது முருகன்தான் என்பதால், வருங்காலத்திலும் திமுகவை எதிர்கொள்ள முருகனால் முடியும் என்று தலைமை நம்புகிறது... இது கந்த சஷ்டி விவகாரத்திலும் பளிச்சென தெரிந்தது. அதுமட்டுமல்ல, திமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சில தலைவர்களை இழுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிலரிடம் நேரடியாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக சொல்கிறார்கள். இதனால் திமுக தரப்பு மேலும் டென்ஷன் எகிறி உள்ளதாகவும் தெரிகிறது.

வியூகங்கள்

வியூகங்கள்

இப்படிப்பட்ட காரணங்களுக்காகவே பாஜக தலைமை முருகன் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்துள்ளது.. பட்டியலின சமுதாய வாக்குகளை குறி வைத்து முருகனை களமிறக்கினாலும், தற்போது, திமுகவுக்கு எதிராக பாஜக தலைமை, பக்காவாக பிளான்களை அமைத்து வருவது தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

தாமரை

தாமரை

அதிமுக அந்த அளவுக்கு பாஜகவுக்கு சீட் தருமா? அல்லது வழக்கு விசாரணை என்று சொல்லி போதுமான சீட்டை பாஜக தலைமை கேட்டு வாங்குமா? அப்படியே வாங்கினாலும் அந்த இடங்களில் எல்லாம் தாமரை இனியாவது மலருமா? திமுகவுக்கு மாற்றாக பாஜக உருவாகுமா என்றெல்லாம் இனிமேல்தான் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+