30 - 25 - 15.. இவ்வளவுதான் முடியும்.. உடும்பு பிடியில் அதிமுக.. கையை பிசையும் பாஜக, பாமக, தேமுதிக
அதிமுக கூட்டணியில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாகவும், தங்களுக்கான சீட் பேரங்களை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக -பாஜகவின் பிரச்சனை நீடித்து கொண்டே இருக்கிறது.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை பாஜக மனசார ஏற்கவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ்சும் மவுனம் காத்து வருகிறார்.. இதனால், பாஜக ஏதாவது சைலண்ட்டாக காய் நகர்த்தி வருகிறதா என்ற சந்தேகமும் தமிழக அரசியலை கவ்விக் கொண்டுள்ளது.

ரஜினியின் முடிவு வெளியாகும்வரை அமைதி காத்த கட்சிகள், இப்போது தங்கள் கூட்டணியை உறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.. இதனால், அதிமுக கூட்டணி அப்படியே மறுபடியும் தொடரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதிக்குள் கூட்டணியை முமடிவு செய்துவிடுவதிலும் அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில், பாஜகவிற்கு 30, பாமகவிற்கு 25, தேமுதிகவுக்கு 15 என்று முடிவாகி உள்ளதாம்.. அப்படியானால் மீதமுள்ள தொகுதிகள் அனைத்திலுமே அதிமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது தங்கள் கூட்டணியில் உள்ள தமாகா போன்ற கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்க யோசித்து வருகிறதாம்.. ஆனால், இதற்கு பாஜக, பாமக இரண்டு கட்சிகளுமே ஏற்பார்களா என்று தெரியவில்லை.. பாஜக 40-ல் நிற்கிறது.. பாமக 35-ல் நிற்கிறது... இதுதான் இப்போதைக்கு சிக்கலாகவும், இழுபறியாகவும் உள்ளதாம்.
எப்படி பார்த்தாலும் 150-க்கு கீழே அதிமுக போட்டியிடாது என்று சொல்கிறார்கள். 170 என்றே வைத்து கொண்டாலும், 120-தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக நினைக்கிறதாம்.. இதில், பாமகவுக்கோ, பாஜகவுக்கோ அதிக தொகுதிகளை ஒதுக்கிவிட்டால், அது அத்தனையும் திமுகவுக்கே சாதகமாக போய்விடும் என்பதிலும் அதிமுக கவனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது!
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications