Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10 கோடி அதிகம்.. உ.பி சாமியாருக்கு ஆதரவாக பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்! சென்னையில் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உ.பி சாமியார் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி நிர்ணயித்திருந்தார். இந்நிலையில் உ.பி சாமியாரின் கருத்தை ஆதரித்து பேசியதாக சென்னை மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்த் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

BJP councilor Uma Anand spoke in support of the preacher who fixed Rs.10 per Udayanidhi head

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உச்சமாக உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.

இதனையடுத்து ரூ.10 கோடியை நிர்ணயித்த சாமியார், ரூ.10 கோடி போதாது என்றால் அதை மேலும் அதிகரிக்கவும் தயார் என்று கூறியிருந்தார். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதியை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்த் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, "உதயநிதி தலைக்கு, அயோத்தி சாமியார் ரூ.10 கோடி பரிசு அறிவித்தது தவறு. அதிகமாக விலை நிர்ணயித்துள்ளார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் வொர்த் இல்ல.. அது மிக மிக அதிக விலை! மீதி விஷயங்களுக்கெல்லாம் விலைவாசி பேசும் நாம், இதுவும் விலைக்கு ரொம்ப ஜாஸ்தியானது" என்று கூறியுள்ளார். இவரது இந்த கருத்து உ.பி சாமியாரின் கருத்தை ஒன்றி இருப்பதால் இவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+