Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா கம்யூனிஸ்ட் அரசுதான் கோமியம், சாணத்தில் 'பஞ்சகவ்ய க்ரிதம்' மருந்து தயாரிக்கிறது.. பாஜக பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோமியம் தொடர்பான சென்னை ஐஐடி (மெட்ராஸ் ஐஐடி) இயக்குநர் காமகோடி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்தான் கோமியம், சாணத்தில் பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை தயாரிக்கிறது; கேரளா அரசின் 'ஒளஷதி' என்ற நிறுவனம்தான் இம்மருந்தை தயாரிக்கிறது; அப்படியானால் கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானதா? என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோமியம்' குறித்து ஐ ஐ டி இயக்குனரின் கருத்துக்கு பொங்கு பொங்கு என்று பொங்கி கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். அய்யோ, அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகிறார் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கொண்டிருக்கிறார்கள்.

cow urine bjp madras iit


கேரளாவில், அரசுக்கு சொந்தமான 'ஒளஷதி' என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் தயாரிக்கப்பட்ட 'பஞ்சகவ்ய க்ரிதம்' என்ற மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தானது, மன நோய், மஞ்சள் காமாலை, காய்ச்சல், வலிப்பு நோய் உள்ளிட்டவைகளை குணமாக்குவதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் அருமருந்து என்று கூறுகிறது.

மேலும் இதே கேரளா கம்யூனிஸ்ட் அரசு தான் இந்திய மருத்துவ ஆய்வு ஆணையத்திடம், கொரோனா சிகிச்சைக்கு மாட்டு சிறுநீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் தயாரிக்கும் மருந்துகளை விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் லாபமீட்டுகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு என்ற நிலையில், ஐ ஐ டி இயக்குனர் கூறியதை அரசியலாக்கிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்கது.

ஒரு வேளை, கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானது என்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்? இவ்வாறு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதுதான் என்ன?

சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அப்போது கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு துறவி, கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்திய பதினைந்து நிமிடங்களில் அவரது உடல்நலம் தேறியதாகக் கூறி, பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் உள்ளன, அது பாக்டீரியாக்களை அழிக்கும், பூஞ்சைகளை ஒழிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் என கூறியிருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+