அமர் பிரசாத் ஆள்வச்சு அடிச்சாரு..தலையில் தையலுடன் பாஜக பெண் நிர்வாகி சகோதரி! சென்னை போலீசில் புகார்
சென்னை: பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பாஜக பெண் நிர்வாகியை ஆள் வைத்து அடித்ததால் தலையில் தையல் போடப்பட்டு இருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அவரது சகோதரி புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பாஜக மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரி தேவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, "நான் என் தங்கையுடன் வசித்து வருகிறேன். என் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 19-1-24 அன்று பாரத பிரதமர் தமிழ்நாடு வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக என் தங்கைக்கும் நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அதை பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. ஆனால், 21-1-24 என்று இரவு 8.15 மணியளவில் நான் என் தங்கையின் வீட்டில் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டியிடம் ஓட்டுநராக வேலை செய்யும் மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக மகளிர் அணி மண்டல தலைவர் நிவேதா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் கஸ்தூஉரி இன்னும் எனக்கு தெரியாத 3 நபர்கள் என் தங்கையின் வீட்டுற்கு வந்தார்கள்.
என் ஓனர் அமர்பிரசாத் ரெட்டியிடம் உன் தங்கை பணம் வாங்கி வந்துவிட்டார். அதில் எங்களுக்கு பங்கு கொடு என்று கேட்டு எங்களை அடிக்க தொடங்கினார்கள். எங்களை அடிக்கும் போது அமர் பிரசாத் ரெட்டி தான் உங்களை அடிக்க சொன்னார் என்று சொல்லி அடித்தனர். அவர்களை என்னை அடித்து என் மண்டையை உடைத்தார்கள். என் தங்கையை அடித்து எங்கள் வீட்டையும் தாக்கினார்கள். ஸ்ரீதர் என்னை அடிக்கும்போது தான் போட்டிருந்த பேண்டை அவிழ்த்து காட்டி அசிங்கமாக திட்டி எங்கள் பங்கு வரவில்லை என்றால் உங்களை குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
என்னை அவர்கள் அடிக்கும்போது கஸ்தூரி என்பவர் என் கைகளை பிடித்துக் கொண்டார். நான் என் மண்டை உடைந்த உடன் நான் பாரதி ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நான் அவர்களுக்கு பயந்து இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து என் மண்டையை உடைத்து என் தங்கையை அடித்து எங்கள் வீட்டை உடைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications