மதக் கலவரத்தை தூண்டும் பதிவு-பாஜக சவுதாமணி ஜாமீனில் விடுதலை-சிறைவாசலில் திமுகவுக்கு எதிராக முழக்கம்!
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வந்த பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை புழல் சிறையில் இருந்து இன்று ஜாமீனில் விடுதலையானார். சென்னை புழல் சிறை வாசலில் சவுதாமணிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சவுதாமணி, சென்னையில் முன்னணி டிவி நிறுவவனங்களில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றினார். அரசு பணி ஆசிரியராக பணி கிடைத்த போதும் அதனைவிட்டு மீடியா உலககுக்கு வந்தவர் சவுதாமணி. மீடியாவில் இருந்து விலகிய பின்னர் பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார் சவுதா மணி.

சமூக வலைதளங்களில் சவுதா மணி ஆக்டிவ்வாக செயற்பட்டு வருபவர். சமூக வலைதளங்களில் வலம் வரும் அத்தனை வலதுசாரி கருத்துகளையும் அப்படியே பகிர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால் சவுதாமணி மீது சைபர் கிரைமில் புகார்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை சவுதாமணி நாடியிருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கோல்டன் என்பவர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத கலவரத்தை தூண்டுவது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சவுதாமணி மீது வழக்குப் பதிவு செய்தனர். அதேநேரத்தில் சென்னையில் நடைபெற்ற பாஜக உண்ணாவிரதப் போராட்டத்திலும் தமிழக அரசை இழிவாக விமர்சித்தார் சவுதாமணி என்பது மற்றொரு புகார்.
இப்புகார்கள், வழக்குகள் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் சவுதாமணியை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்று சவுதாமணிக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜாமீன் கிடைத்த நிலையில் சென்னை புழல் சிறையில் இருந்து இன்று சவுதாமணி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுதாமணிக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது தம்மை கைது செய்த திமுக அரசைக் கண்டித்து சவுதாமணி சிறைவாசலில் முழக்கங்களை எழுப்பினார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications