மதக் கலவரத்தை தூண்டும் பதிவு-பாஜக சவுதாமணி ஜாமீனில் விடுதலை-சிறைவாசலில் திமுகவுக்கு எதிராக முழக்கம்!
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வந்த பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை புழல் சிறையில் இருந்து இன்று ஜாமீனில் விடுதலையானார். சென்னை புழல் சிறை வாசலில் சவுதாமணிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சவுதாமணி, சென்னையில் முன்னணி டிவி நிறுவவனங்களில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றினார். அரசு பணி ஆசிரியராக பணி கிடைத்த போதும் அதனைவிட்டு மீடியா உலககுக்கு வந்தவர் சவுதாமணி. மீடியாவில் இருந்து விலகிய பின்னர் பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார் சவுதா மணி.

சமூக வலைதளங்களில் சவுதா மணி ஆக்டிவ்வாக செயற்பட்டு வருபவர். சமூக வலைதளங்களில் வலம் வரும் அத்தனை வலதுசாரி கருத்துகளையும் அப்படியே பகிர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால் சவுதாமணி மீது சைபர் கிரைமில் புகார்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை சவுதாமணி நாடியிருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கோல்டன் என்பவர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத கலவரத்தை தூண்டுவது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சவுதாமணி மீது வழக்குப் பதிவு செய்தனர். அதேநேரத்தில் சென்னையில் நடைபெற்ற பாஜக உண்ணாவிரதப் போராட்டத்திலும் தமிழக அரசை இழிவாக விமர்சித்தார் சவுதாமணி என்பது மற்றொரு புகார்.
இப்புகார்கள், வழக்குகள் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் சவுதாமணியை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்று சவுதாமணிக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜாமீன் கிடைத்த நிலையில் சென்னை புழல் சிறையில் இருந்து இன்று சவுதாமணி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுதாமணிக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது தம்மை கைது செய்த திமுக அரசைக் கண்டித்து சவுதாமணி சிறைவாசலில் முழக்கங்களை எழுப்பினார்.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications