எச்.ராஜாவிற்கு வந்த திடீர் சந்தேகம்!
சென்னை: பாஜக தலைவர் எச்.ராஜாவிற்கு திடீரென இன்று ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதை ட்விட்டரில் அவர் கேட்டுள்ளார்.
ரபேல் போர் விமான, கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில்தான், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவிற்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கண் சிமிட்டிய போட்டோவை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு, "இவரிடம் உண்மை, நேர்மை, நாகரீகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் விவகாரத்தால் எச்.ராஜாவிற்கு இந்த சந்தேகம் வந்துள்ளது போல. ஆனால், நெட்டிசன்களோ, ராஜாவைதான் கிண்டல் செய்து வருகிறார்கள். அவருக்கு நெட்டிசன்கள் சிலர் கொடுத்த பதிலடியை பாருங்கள்.
அய்யய்யயோ!! இவரு அப்டியே நாகரிக டிப்போ..... pic.twitter.com/LUGPwh62LY
— Crazydude (@crazyniz1) December 14, 2018
அய்யய்யயோ!! இவரு அப்டியே நாகரிக டிப்போ..... இப்படி ஒரு நெட்டிசன் கவுண்டமணி புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.
ஐயோ இவரு பேசறது எல்லாமே உண்மைதா கோர்ட்ல போய் மட்டும் நா பேசவா இல்லனு சொல்லுவாரு மத்தபடி அய்யா உண்மைதா பேசுவாரு யாருக்குமே அவருஅவரு முதுகு தெரியாது
— Sathish (@jollyguy01) December 14, 2018
ஐயோ இவரு பேசறது எல்லாமே உண்மைதா கோர்ட்ல போய் மட்டும் நா பேசவே இல்லனு சொல்லுவாரு மத்தபடி அய்யா உண்மைதா பேசுவாரு யாருக்குமே அவருஅவரு முதுகு தெரியாது.
யாரிடம் ஒன்று இல்லையோ அதை பிறரிடமும் இருக்காது என்று நம்புவது மனித இயல்பு.
— Vasan (@Vasan41838305) December 14, 2018
யாரிடம் ஒன்று இல்லையோ அதை பிறரிடமும் இருக்காது என்று நம்புவது மனித இயல்பு. இவ்வாறாக நெட்டிசன்கள், ராஜாவிற்கு பதில் சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications