தமிழ்நாடு ரோடு ஷோ.. 2 லட்சம் பேர் வருவார்கள் என நம்பி ஏமாந்த பாஜக! கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற ரோடுஷோவில் ஏற்பட்ட மிகக்குறைந்த கூட்ட வருகை, அக்கட்சி மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக கட்சிக்குள் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட திட்டமும் ஏமாற்றமும்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை தந்தார். அவருக்காக பெரிய அளவில் பிரம்மாண்ட கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னை தி.நகர் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரம்மாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

BJP Internal Crisis

இந்த நிகழ்ச்சியை தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. குறிப்பாக, ரோடுஷோவில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, தமிழகத்தில் பாஜகவிற்குப் பெரும் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அக்கட்சி முடிவு செய்தது. இதற்காக சுமார் 2 லட்சம் மக்களைத் திரட்டும் பொறுப்பு, கட்சியின் முக்கிய மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணப் பட்டுவாடாவும் கணக்கும்

மக்களைத் திரட்டுவதற்காகப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு ₹400 என்ற வீதத்தில், 2 லட்சம் பேரை அழைத்து வரத் தேவையான முழுத் தொகையும் அந்த ஒருங்கிணைப்பாளரிடம் முன்கூட்டியே வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. வாகனம், உணவு மற்றும் இதர செலவுகளையும் தாண்டி, மக்களை உற்சாகமாக வரவழைக்க இந்தக் கணக்கீடு செய்யப்பட்டதாம்.

அதிர்ச்சியில் அமித் ஷா

ஆனால், ரோடுஷோ தொடங்கியபோது அங்கிருந்த காட்சி பாஜக நிர்வாகிகளை நிலைகுலையச் செய்தது. 2 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில், ஆனால் வெறும் 400 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதைக் கண்டு அமித் ஷா மிகுந்த கோபமடைந்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் பலமாக இருந்தும், மக்கள் வராதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. வாகனத்தில் நின்றபடி மக்களை நோக்கி கையசைக்கத் தயாராக இருந்த அமைச்சர், குறைந்த எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கண்டு தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டினார்.

கட்சிக்குள் விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் மாநிலத் தலைவர்களிடம் அமித் ஷா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். "இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டும் ஏன் மக்கள் வரவில்லை?" என்ற கேள்வி மேலிடத்தில் இருந்து எழுப்பப்பட்டுள்ளது.

கடுப்பான அமித் ஷா

தற்போது, கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை ஏற்ற அந்த மண்டல ஒருங்கிணைப்பாளர் மீது கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. கட்சி வழங்கிய நிதியில் முறைகேடு நடந்ததா அல்லது மக்களை ஒருங்கிணைப்பதில் திட்டமிடல் தோல்வியடைந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் சூழலையும் உருவாக்கியுள்ளது. கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+