'தொகுதி மறுசீரமைப்பு' பாஜகவின் அரசியல் ஆதிக்கம்.. தென் மாநிலங்களுக்கு நேரும் இழப்பு.. பினராயி விஜயன்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்க வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயம் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்பட்டு வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பினராயி விஜயன், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பாக தொகுதி மறுசீரமைப்பு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 24 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். 3 மாநில முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2 ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. இதனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பது அரசியல் வலிமை குறைவதாகவே பார்க்க வேண்டும். எண்ணிக்கையே அதிகாரம்.
தொகுதி மறுசீரமைப்பு ஏற்பட்டால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். இதனால் தொகுதி மறுசீரமைப்பை சாதாரணமாக கருதக் கூடாது. இந்த போராட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல. இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மற்ற மாநில பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளின் கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம். மாநிலங்களின் பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். குறுகிய அரசியல் லாபத்திற்காக தொகுதி மறுசீரமைப்பை பயன்படுத்த பாஜக நினைக்கிறது.
வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகள் கணிசமாக குறையும். வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையாகும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களை ஒருங்கிணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications