"தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால்.. வடமாநிலத்தவர் தான் பணிபுரிவார்கள்.." கரு.நாகராஜன் பரபர
சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பொன்னையனின் பேச்சு தான் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது. நீட், காவிரி, ஜிஎஸ்டி, ஈழ தமிழர்கள் விவகாரத்தில் பாஜகவைக் குற்றஞ்சாட்டும் வகையில் அவர் பேசியிருந்தார்.

பொன்னையன் பரபர
பொன்னையன் பேசுகையில், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பாஜகவின் பருப்பு வேகாது. பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை" என்று கூறியிருந்தார். பொன்னையன் பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாஜக சாடல்
பொன்னையன் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வலியுறுத்தி உள்ளார். இது மட்டுமின்றி போட்டி தேர்வுகள் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். இது குறித்து சென்னை தாம்பரம் அடுத்த நெடுஞ்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பா.ஜ.கவை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு!

டிவி எல்லாம் பார்க்க மாட்டாரா
அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சொல்லிவிட்டு சொன்னாரா என விளக்கவேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் பாஜக முன்னெடுப்பு பணிகளைச் செய்துவருகிறது. இதையெல்லாம் அவர் பார்க்க மாட்டாரா? அவர் பேப்பர் படிக்க மாட்டாரா? டிவி பார்க்க மாட்டாரா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவர் எழுப்பினார்.

தமிழக இளைஞர்கள்
தொடர்ந்து போட்டித்தேர்வுகள் குறித்துப் பேசிய அவர், "அதுபோல தேசிய அளவில் போட்டி தேர்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. தபால் துறை, ரயில்வே கலாசி போன்ற பணிகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதுபோல் தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதில்லை. இதனால் ஒருவரும் பணியில் இல்லை எனக் கூறினாலும் ஆச்சர்யபடுவதுவதில் ஒன்றுமில்லை!

பங்கேற்பது இல்லை
போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டால் தானே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லை என்றால் வடமாநில இளைஞர்கள் தான் அந்த பணிகளிலும் பணி அமர்த்தப்படுவார்கள்" என்றார். தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் அதிகம் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜனின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications