சாதகமாக வந்துள்ள எக்ஸிட் போல் முடிவுகள்.. ஹேப்பி மோடில் பாஜக தலைவர்கள்
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.
நேற்று மாலை தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளது.
|
எச் ராஜா
கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் டிவிட்டரில் தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளனர். அதன்படி எச் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது யாருக்கு சாதகம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் தொங்கு பாராளுமன்றம் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர் என்பதே காரணம்
|
திசை தெரிந்துவிட்டது
கருத்துக்கணிப்புகள் வெற்றியின் திசையை காட்டிவிட்டன. 23ஆம் தேதி அதன் அளவு தெரிந்துவிடும். பாஜக தனிப்பெரும்பான்மை பெரும் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. மீண்டும் மோடி என பதிவிட்டுள்ளார் எச் ராஜா.
|
10 மாதங்களாக
இதேபோல் பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்கு பின்னும் வெளிவந்த கருத்துக்கணிப்புக்களுக்கு உள்ள வித்தியாசம் பேராசைக்கும் , உண்மைக்கும் உள்ள வித்தியாசமே. கடந்த 10 மாதங்களுக்கு முன்பே 300 இடங்களுக்கு மேல் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார்.
|
சாணக்யா
இதேபோல் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் டுடேஸ் சாணக்யாவின் கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி வெற்றியின் அடையாளமாக 2 விரல்களை காட்டியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications