ராஜ்பவனுக்கு படையெடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்! மாணவி சம்பவத்தில் நீதி கேட்டு ஆளுநரிடம் மனு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்து வருகின்றன. தவெக விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மனு அளித்த நிலையில் தற்போது, பாஜக பெண் நிர்வகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு, ராதிகா சரத்குமார், விஜயதாரணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்து அவரிடம் மனுவை அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதேபோன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்து இருந்தார்.

இதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து மனு அளித்தார். இந்த நிலையில் பாஜக பெண் நிர்வகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு, ராதிகா சரத்குமார், விஜயதாரணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்து அவரிடம் மனுவை அளித்தனர்.












Click it and Unblock the Notifications