வானதி இப்படி சொன்னதுமே.. குபீர்னு சிரித்த அவை.. டக்குனு எழுந்த பிடிஆர்.. பதில் தந்த சபாநாயகர்

பாஜகவின் வானதி சீனிவாசன் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியதால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சபாநாயகர் அப்பாவு மீது நிறைய மரியாதையை வைத்திருப்பவர் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. சில தினங்களுக்கு முன்பு, பேரவையில் முதல் முதலாக உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு "கன்னி" என்கிற சொல்லாக குறிப்பிடப்பட்டது.. அதற்கு வானதி சீனிவாசன், இளம் வயது பெண்ணைக் குறிக்கும் வார்த்தைதான் கன்னி.. என்னைப் பொருத்தவரை அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரிகமாக இருக்கும்' என்றார்.

வானதி

வானதி

வானதியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வானதியின் பேச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.. அப்போது வானதி, "சபாநாயகரே.. நீங்களும் நானும் எத்தனையோ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விவாதித்துள்ளோம்" என்றார். அதற்கு மறுபடியும் பதிலளித்த சபாநாயகர், "ஆமாம்.. நிச்சயமாக, உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை முறைப்படி சட்டப்பேரவையில் கொடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்..

பதில்

பதில்

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில்துறை மீதான விவாதம் நடைபெற்றது.. இந்த விவாதத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பேசினார்.. அப்போது மானிய கோரிக்கை தொடர்பாக இல்லாமல், பொது விவகாரம் பலவற்றை குறிப்பிட்டு வானதி பேச்சை ஆரம்பித்தார்.. இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, இன்று தாக்கல் செய்த மானிய கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசவேண்டும் என்றார்... உங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசிவருகிறீர்கள்.. சீக்கிரமாக பேசி முடியுங்கள்" என்றார்.

சிரிப்பலை

சிரிப்பலை

இதை கேட்ட வானதி சீனிவாசன், "சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும், அவர் அவர் பேசும் நேரத்தை அவர் அவர் கணக்கில் வைக்க வேண்டும்... அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்க கூடாது" என்றார்.. வானதி இப்படி சொன்னதுமே பேரவையில் சிரிப்பலை குபீர் என எழுந்தது..

பிடிஆர்

பிடிஆர்

அப்போது நிதித்துறை அமைச்சர் பிடிஆர் திடீரென எழுந்தார்.. "கடந்த ஆட்சி காலத்தில் எம்எல்ஏக்கள் பேசும் போது அமைச்சர்கள் யாராவது குறுக்கிட்டால், அவர்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும் உறுப்பினர் பேசும் நேரத்தில்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டது.. அதனால், தனி ஒரு உறுப்பினருக்காக விதியை எல்லாம் மாற்ற முடியாது" என்றார்.

பதில்

பதில்

இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "கடந்த ஆட்சி போல் இல்லாமல் ஜனநாயகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான், இந்த அவை நடத்தப்பட்டு வருகிறது.. அதனால் தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+