Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ.. பாஜக நாராயணன் திருப்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தனது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் 3 பேரையும் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராஜீவ் கொலையின் உண்மை குற்றவாளிகள் என யாரையும் சொல்ல முடியாது.

என்னால் காட்டி கொடுக்க முடியாது. காட்டி கொடுக்கும் பழக்கம் எனக்கு இல்லை. காட்டி கொடுத்திருந்தால் 31 வருடங்கள் சிறையில் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

நளினியின் இந்த பேட்டியை தனது ட்விட்டரில் சுட்டிக் காட்டி பாஜக நாராயணன் திருப்பதி தனது பதிவில் கூறியிருப்பதாவது: நளினி தனது பேட்டி மூலம் கொலை செய்ய சொன்னது யார் என தெரியும். ஆனால், சொல்ல மாட்டேன் என்று தெளிவாக சொல்கிறார். இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், ராஜீவ் காந்தி செத்துட்டாரா? என்று கேட்பாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

 பாரத பிரதமர் ராஜீவ் காந்தி

பாரத பிரதமர் ராஜீவ் காந்தி

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், முருகன், ரவிசந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

பின்னர் அவர்களது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நிலையில் அவர்களில் பல கட்ட போராட்டத்திற்கு பின்பு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்டதன் அடிப்படையில் மற்ற 6 பேரையும் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தது.

நளினி விடுவிப்பு

நளினி விடுவிப்பு

இந்த நிலையில் நளினியை விடுவித்த சிறைத் துறை நிர்வாகம், மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பயஸும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல மறுக்கிறார்கள். சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விரும்புகிறார். முருகன் லண்டனில் இருக்கும் தனது மகளுடன் செட்டில் ஆக விரும்புகிறார். இவ்வாறு நளினி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+