இந்தியாவோட அழுத்தத்தால் அபிநந்தன் விடுதலை... சுப.வீ.க்கு டுவிட்டரில் பதிலளித்த ஹெச்.ராஜா
சென்னை: ராஜ்ய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை என்று சுப. வீரபாண்டியனுக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பதில் அளித்துள்ளார்.
உலக நாடுகளே உற்று நோக்கிய அபிநந்தன் விவகாரத்தில்... அவரை விடுவிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். அவரது இந்த ஜனநாயக முடிவுக்கு உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைவர்கள், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
அபிநந்தனை விடுவிக்க உத்தரவிட்ட இம்ரான் கானை புகழும் வகையில் திராவிட இயக்க தமிழர் பேரவை இயக்கத்தின் சுப. வீரபாண்டியன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
#அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற #இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?
— SubaVeerapandian (@Suba_Vee) March 1, 2019
அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்? என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.
அந்த பதிவுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் இராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலை பார்க்காமல் ஜாதீய பதிவிட்டவர் தானே இவர் https://t.co/mnHhbotLSt
— H Raja (@HRajaBJP) March 1, 2019
அதில் அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் ராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலைப் பார்க்காமல் சாதியப் பதிவிட்டவர் தானே இவர் என்று கூறியிருக்கிறார்.
[Read more: எல்லையில் பதற்றம்... எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்... தமிழிசை வேதனை]