இது எப்படி இருக்கு.. பாஜக பால் கனகராஜ் மீது இந்து முன்னணி புகார்.. காரணம் தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த பால் கனகராஜின் செயலை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் பால் .கனகராஜ். மூத்த வழக்கறிஞருமான இவர் மீது இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பால் கனகராஜ் மீது குற்றச்சாட்டு வைத்து இருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: "2047 ஆம் ஆண்டில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் எனவும், அதற்கு தடையாக இருக்கும் இந்து தலைவர்களை Eliminate செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த இரண்டு வக்கீல்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.
ஆனால் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் என்ற அந்த இரண்டு வழக்கறிஞர்களும் இஸ்லாமிய குற்றவாளிகளுக்காக வழக்கில் ஆஜரானார்கள் என்பதால் கைது செய்யப்பட்டது போல் ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையில் ஒரு சில வக்கீல்களின் ஏற்பாட்டில் கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அந்த வழக்கறிஞர்கள் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக செயல்பட்டவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சதி திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் என்.ஐ.ஏஎ அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் தான், பாஜக மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.
அது மட்டும் இன்றி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து, முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்துள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவலுடன் பேட்டியளித்து இருக்கிறார்.

2047 -ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த 2 வழக்கறிஞர்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் பால் கனகராஜின் அளித்த பேட்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது. இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த பால் கனகராஜின் செயலை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பால் கனகராஜ் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியிருப்பது பாஜக மட்டும் இன்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications