Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு சீரியஸ் ஆகும்ன்னு நினைக்கல.. பிரஷர் போட்ட சிபிஐ.. அலறும் தவெக.. அமித் ஷாவரும் வருகிறாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.

TVK Vijay

முக்கியமாக நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் கடந்த 10 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். ஆனால் இவ்வளவு நேரம் விசாரணை நடத்தியும் கூட அது நிறைவு பெறவில்லை. கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்றும் விசாரணை தொடர உள்ளது. அந்த அளவிற்கு வழக்கில் சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.

அஜய் ரஸ்தோகி

ஏற்கனவே சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக நெருக்கடி?

இன்னொரு பக்கம் தவெக உடன் கூட்டணி அமைக்க பாஜக நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் வரவுள்ளார். அவரது வருகை, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சிகளின் தேர்தல் பணிகளுக்கு இடையே முக்கியத்துவம் பெறுகிறது. இவரின் இந்தப் பயணம், மாநிலத்தில் அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதும், அவர்களின் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதும் ஷாவின் முக்கிய நோக்கமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் வருத்தங்கள் , எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அமித் ஷா இதில் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

விஜய் அமித் ஷா

அதேபோல், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி, தமிழகத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என பாஜக தலைமை நம்புகிறது. ஏனெனில், தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விஜய் அல்லது அவரது முக்கியப் பிரதிநிதிகளுடனான அமித் ஷாவின் சந்திப்பு, சாத்தியமான ஒப்பந்தங்கள், இடப் பங்கீடு மற்றும் கொள்கை ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று அவர் விஜயை சந்திப்பார்.. அல்லது விஜயின் பிரதிநிதியாக வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையலாம்.

மேலும், விஜய்யின் நெருங்கிய பிரதிநிதி ஒருவர் அமித் ஷாவைச் சந்தித்து பாஜகவின் திட்டங்களை முதலில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, விஜய் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+