Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீட்டை கலைச்சு.. புதுசா ஆடுங்க! மாஸ்டர் மைண்டை தமிழ்நாட்டிற்கு அனுப்பிய அமித் ஷா! எடப்பாடி உடன் மீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக சென்னை வருகிறார் பியூஸ் கோயல்.

இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் முக்கிய சந்திப்புகளை நடத்துகிறார். கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி விரிவாக்கம், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார்.

பியூஷ் கோயல் தமிழ்நாடு பிளான்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இந்த அறிவிப்பு கடந்து போகக்கூடிய மற்றொரு நியமனம் கிடையாது. இந்த அறிவிப்பிற்கு பின் பாஜகவின் மிக முக்கியமான திட்டமிடல் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் திமுகவை எதிர்க்க மாட்டார்.. மாறாக கூட்டணி விவகாரத்தில் அதிமுகவிற்கு பிரஷர் போடுவார் என்கிறார்கள்.

BJP send Piyush Goyal to meet Edappadi Palanisamy ahead of Tamil Nadu Election

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) செல்வாக்கை அதிகரிக்கும் இலக்குடன் இந்த முக்கிய முடிவை கட்சி எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 2014 முதல் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் பியூஷ் கோயல், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

பியூஷ் கோயல் வருகை

தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பையந்த் பாண்டாவிற்குப் பதிலாக பியூஷ் கோயல் இப் பொறுப்பை ஏற்றார். டிசம்பர் 14 அன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், மமக, த.வா.க, ஏடிபி, ஏஐஎஃப்.பி மற்றும் எம்.வி.கே.இணைந்து மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றின. தி.மு.க மட்டும் 126 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதே தேர்தலில், பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளில் நான்கு இடங்களை வென்றது. அ.தி.மு.க.வுடனான கூட்டணியும், வேட்பாளர்களின் தொகுதி familiarity-யும் 2001-க்குப் பிறகு பாஜக மீண்டும் மாநில சட்டசபையில் காலடி பதிக்க உதவின. 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் கூட, பா.ஜ.க. தனது வாக்கு சதவீதத்தை இரு இலக்க எண்ணாக அதிகரிக்க முடிந்தது.

பாஜகவின் வளர்ச்சி

பியூஷ் கோயலை மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அ.தி.மு.க.விடம் இருந்து 65 தொகுதிகளை பா.ஜ.க. கோரலாம் என்று நயினார் நாகேந்திரன் ஒரு பட்டியலை சமர்ப்பித்துள்ளார். மத்திய அமைச்சர் என்ற அனுபவம் மட்டுமல்லாமல், கோயல் பல்வேறு மாநிலங்களில் கட்சியின் தேர்தல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முக்கியமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம் தெரிவித்த தகவலில், "பாஜக அதிக இடங்களில் போட்டியிட வுள்ளது. இதன் பின்னணியில்தான் பியூஷ் கோயல் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், 2019 மக்களவைத் தேர்தலில், இவரால்தான் பா.ஜ.க. சுமார் ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிந்தது. இவருக்கு அ.தி.மு.க. தலைமைடன் நல்லுறவு இருப்பதாகக் கூறப்படுகிறது" என்றார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு முக்கியமான தொகுதிப் பங்கீட்டு ஏற்பாட்டில் கோயல் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய பா.ஜ.க. தலைமைக்கும் மாநிலப் பிரிவுக்கும் இடையே ஒருமித்த வியூகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அவர் திறம்பட ஒருங்கிணைத்தார். அரசியல் ஆலோசகர்கள் இது தொடர்பாக கூறுகையில், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி மிக அவசியம். அதை உடையாமல் பார்த்துக்கொள்ள கோயல் அவசியம். எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முகமாக இருக்கும் நிலையில், பல விதங்களில் இது ஆந்திரப் பிரதேச மாடலை போலவே இருக்க போகிறது. அங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மூத்த பங்காளியாகவும், பா.ஜ.க. இளைய பங்காளியாகவும் இருந்தது.. அதே மாடலை தமிழ்நாட்டில் செயல்படுத்த பியூஸ் கோயல் காய்களை நகர்த்துவார்.

பியூஸ் கோயல் டாஸ்க் என்ன?

பியூஸ் கோயல் வரும் காலங்களில் 3 விதமான நடவடிக்கைகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. முதலாவதாக, அவர் அதிமுகவிடம் 65 இடங்களை கேட்பார். இதற்கான ஆலோசனைகளை செய்வார். அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரனின் அமமுகவை கொண்டு வர பணிகளை செய்வார். அதேபோல் ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் இணைப்பதற்கான பணிகளை செய்வார். இதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இவர் அதிமுகவிற்குத்தான் அதிகமாக பிரஷர் போடுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+