கோவிலுக்குள் ‘பிடி மண்’ எடுக்கச் சென்ற பாஜக மாநில நிர்வாகி கைது.. திடீரென கிளம்பிய கோஷம்.. பரபர!
சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, 'என் மண் என் தேசம்' இயக்கத்திற்காக வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பிடி மண் எடுக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக 'என் மண் என் தேசம்' என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமிர்தப்பூங்கா உருவாக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், சென்னை வில்லிவாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற இருந்தது. 'என் மண் என் தேசம்' இயக்கத்துக்கு தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் இதில் கலந்துகொள்ள வந்தார்.
அப்போது பிடி மண் எடுப்பதற்காக பாஜகவினரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால், போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், பாஜக மாவட்டத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வினோஜ் பி செல்வம், "டெல்லியில் அமிர்த வனம் அமைத்து நாட்டை மண்ணின் மூலம் ஒருங்கிணைக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் திமுக அதன் பிளவுபடுத்தும் சித்தாந்தத்துடன் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பார்க்கிறது! பாஜகவினர் அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications