Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைதை சாதிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை.. குஷ்பு, காயத்ரி ரகுராம் கூட வரவில்லை ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொட்டிய மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடை பிடித்தபடி பாஜக மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவை ரவுடிக் கட்சி என விமர்சித்தார்.

சைதை சாதிக்

சைதை சாதிக்

'சாதிக் மூளையில் சிக்கலா.. பெண்கள் என்றால் உனக்கு நக்கலா'.. என்ற முழக்கத்தை எழுப்பியவாறு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் திமுக பேச்சாளரை வெளுத்து வாங்கினர். அவர்களை தொடர்ந்து கொட்டிய மழையில் மைக் பிடித்து பேசிய அண்ணாமலை, பெண்களை தவறாக பேசியவர்களை கைது செய்வதை விடுத்து பெண்களை தவறாக பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பதாக கூறினார்.

அமைச்சர்கள் மீது சாடல்

அமைச்சர்கள் மீது சாடல்

கடந்த 16 மாதங்களாக திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் தாம் பார்த்துக் கொண்டுத் தான் இருப்பதாகவும் மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடிப்பது, ஓசி என்று சொல்லி கிண்டல் செய்வது, பேச்சாளரை வைத்து ஆபாசமாக பேச வைத்து அதை அமைச்சர் வேடிக்கை பார்ப்பது என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்வதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை கைது

அண்ணாமலை கைது

திமுகவை ரவுடிக் கட்சி என விமர்சித்த அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜின் தூண்டுதலின் பேரில் தான் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக பேசியதாக தெரிவித்தார். மழை பெய்து கொண்டே இருந்ததால் பேச்சை விரைவாக முடித்த அண்ணாமலையை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில தலைவர்

மாநில தலைவர்

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் மாற்றுக் கட்சியின் மேடை பேச்சாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கட்சியின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளை கலந்துகொள்ள வைத்துவிட்டு மாநிலத் தலைவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். இதனிடையே குஷ்பு, வானதி சீனிவாசன், காய்த்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+