தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது.. ஒரே போடுதான்.. சு.சுவாமி "சுளீர்".. இதுதான் காரணமாம்!
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை அதிமுகவுடன் சேர்ந்து வெற்றிபெற்று எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு அதிமுக 20 இடங்களை ஒதுக்கி உள்ளது.
பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கி உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க வேண்டும் என்று நேற்று அதிமுக முடிவு செய்தது. இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. சென்னையில் சில இடங்கள், சில தென் மாவட்ட தொகுதிகள், கொங்கு மாவட்டத்தில் சில தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

நம்பிக்கை
பாஜக இந்த முறை கண்டிப்பாக அதிக அளவில் எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. 20 இடங்களில் போட்டியிடுகிறோம், குறைந்தது 8-10 எம்எல்ஏக்களை அனுப்பலாம் என்று பாஜக நம்புகிறது. ஸ்டார் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கலாம் என்று பாஜக நினைக்கிறது.

ஆலோசனை
இதற்கான ஆலோசனைகளை பாஜக கடந்த ஒரு வாரமாக செய்து வருகிறது. வானதி சீனிவாசன், எச். ராஜா, எல் முருகன், குஷ்பு, நமிதா ஆகியோர் பாஜக சார்பாக கண்டிப்பாக போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுபோக மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

வெற்றிபெறாது
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக வெற்றிபெறாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது பேச்சில், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.பாஜக 2 அல்லது 3 தொகுதியில் வெல்லலாம், இல்லாவிடில் அதிலும் வெல்லாது. பாஜக என்பது தேசிய கட்சி, தேசிய கட்சியான பாஜக தனித்து போட்டி இருக்க வேண்டும். ஆனால் தமிழக பாஜக அந்த முடிவை எடுக்கவில்லை.

தனித்து போட்டி
வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து நிற்க வேண்டியதுதான் முக்கியம். ஆனால் பாஜக அதை செய்யவில்லை என்று எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் பெரிய கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications