"மர்ம பெண்" கிளப்பும் பீதி.. 2021ல் பேரழிவு காத்திருக்கு.. பாபா பாட்டி சொல்வது நடக்குமா?
வரும் 2021 எப்படி இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார்
சென்னை: வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்று கண் தெரியாத மர்ம பெண் பாபா வங்கா தெரிவித்த கணிப்பு ஒன்று பரபரப்புடன் வைரலாகி உள்ளது,
பாபா வாங்கா... இவர் பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண்.. கண் தெரியாதவர்.. 85 வயதில் அதாவது 1996-ம் வருடம் இவர் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.
கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. இப்போதும் அவை நடந்து வருகின்றன.

கண்பார்வை
இவர் 12 வயசு வரை நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தாராம்.. அதற்கு பிறகுதான் நோய்வாய்ப்பட்டு, தன் கண்பார்வையை முற்றிலும் இழந்துள்ளார்... பார்வை இழந்தவுடனேயே, வருங்காலம் குறித்து மொத்தத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. இப்படி சொல்வதற்கு கடவுள் தனக்கு புதுவித சக்தியை கொடுத்திருப்பதாக பாபா கூறினார்..

இரட்டை கோபுரம்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல் நடக்கும் என்று இவர் ஏற்கனவே சொல்லி இருந்தார்.. தேபோல 2011-ல் செப்டம்பரில் அந்த சம்பவம் நடந்தது.. அதேபோல, அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார் என்று சொல்லி இருந்தார்.. அப்படியேதான் ஒபாமா வந்து பதவியை ஏற்றார்..

மர்மம்
அதனால்தான், ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புதுவருடம் தொடங்கும்போதும் இந்த மர்ம பெண்ணின் வார்த்தைகள் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் 2021-ம் ஆண்டு நடப்பது குறித்தும் இவர் கணித்து விட்டு போயுள்ளார்.. அந்த வகையில், 2021-ல் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்று கணித்து வைத்துள்ளார்.. அமெரிக்காவின் 45வது அதிபர் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்று சொல்கிறார்.. அந்த 45வது அதிபர் சாட்சாத் நம்ம டிரம்ப்தான்!

வேற்றுகிரகவாசி
மேலும் அடுத்த 200 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.. அதாவது, இன்னும் 200 வருஷத்தில் மனிதன் வாழ தகுந்த இடமாக இந்த பூமி இருக்காதாம்.. ஒரு வலிமையான டிராகன், இந்த மொத்த மனித குலத்தையே கைப்பற்றி விடுமாம்.. அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவார்களாம்.. டிராகன் என்று பாபா சொல்வது அநேகமாக சீனாவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நடக்குமா?
ஏற்கனவே, இந்த 2020 நமக்கு ஏகப்பட்ட இழப்புகளையும், சோகங்களையும் தந்துவிட்டு சென்றுள்ளது.. நம்மால் எஸ்பிபியை இன்னும் மறக்க முடியவில்லை.. இந்த கொரோனாவுக்கு இன்னும் விடை தெரியவில்லை.. புயல், வெள்ளம், இயற்கை சீற்றத்தினால் மனித உயிர்கள் பல மண்ணோடு மண்ணாக புதைந்து போயுள்ளன.. இதில், 2021-வது நமக்கு நன்றாக இருக்க வேண்டுமே என்ற கலக்கம் இப்போதே வந்துள்ளது.. இந்நிலையில், பாபா சொல்வதெல்லாம் பார்த்தால்,, இன்னும் பீதியை கிளப்புவதாக இருக்கிறது.. பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications