Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் காக்கும் ரத்தம்.. கெருகம்பாக்கம் கே.கே பார்மஸி கல்லூரியில் ரத்த தானம் அளித்த மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே பார்மஸி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.

பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரைக் காக்கும் இரத்ததானத்திற்காக பணம் செலுத்தப்படாத இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

Blood donation camp: Gerugambakkam KK Pharmacy College Students donated blood

கடந்த 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார சபையால் முதன்முதலில் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டது, அது முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 'இரத்தம் கொடு, பிளாஸ்மா கொடு, வாழ்க்கையைப் பகிர்ந்துகொள், அடிக்கடி பகிர்ந்துகொள்' என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ரத்த தான முகாமிற்கு, கே.கே.பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனா தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.சாந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ரத்த தானம் செய்வதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாது. இது தாராள மனப்பான்மையுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே வர முடியும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான இரத்த தானம் செய்யப்படுகிறது.
அமெரிக்காவில், ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும் இரத்த தானம் தேவைப்படுகிறது. ஒரு யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். கே.கே.பார்மசி கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.

"ஒரு உயிருக்கு முக்கியமாக இருப்பது ரத்தம் தான். ரத்த ஓட்டம் நிற்கும் போது அல்லது குறையும் போது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உண்டாகும். ஆகவே, ஒரு உயிரைக் காப்பதில் ரத்தத்தின் பங்கு அவசியம் ஆகிறது. உலக உயிர்கள் உயிர் வாழ தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியமானது ரத்தம். உலகில் வாழும் பிற உயிர்களிடம் இல்லாத ஒரு விஷயம் ரத்தக்கொடை.

மனிதர்களை தவிர்த்து வேறு எந்த ஜீவராசிகள் விபத்தாலோ வேறு சில சூழல்களாலோ ரத்தத்தை இழக்கக்கூடிய சூழல் வந்தால் அதற்கு வேறு ஒரு உயிருடைய ரத்தத்தை கொடுத்து உயிரை காப்பது இயலாத காரியம். மனிதர்களுக்கு மட்டுமே, ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதரின் ரத்தத்தை கொடுக்கலாம்" என்று ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கப்பட்டது.

கே.கே., பார்மசி கல்லூரியின் கல்வி நிலையத் தலைவர் டாக்டர்.செந்தில்குமரன் மேற்பார்வையில், கல்லூரியில் பயிலும் 56 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். அவர்களை ஊக்குவித்து பாராட்டும் விதமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ரத்ததானம் வழங்கிய மாணவர்கள், மீண்டும் இதே போல தொடர்ச்சியாக வழங்க உள்ளதாகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+