தமிழகத்தில் போகி பண்டிகை கோலாகலம்! சென்னையில் டயர்களை எரித்து "கொண்டாட்டம்"
சென்னை: தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மார்கழி மாதத்தின் கடைசி நாளும் இன்றாகும்.
போகி பண்டிகை தமிழ் மாதத்தின் மார்கழியில் கடைசி நாள் ஆகும். அதாவது பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என கொண்டாடி வருகிறார்கள்.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் போகி மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
பழைய பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்று மாசு சற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் பொருட்களையே மக்கள் எரித்து வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் டயர், பிளாஸ்டிக் பொருட்கள், டியூப், துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரிக்கிறார்கள்.
இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள் என்பதால் ஆங்காங்கே குளிர் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications