சயனைடு நிரப்பிய 2 ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கும்.. சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என தலைமைப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்த இமெயிலில், சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் பிற்பகல் 12.45 சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் இஸ்லாமியர்கள் முன்னதாகவே நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி அறை, வாகன நிறுத்தம், பொருட்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் எந்தவித வெடிப்பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் புரளி என தெரியவந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட் தலைமை பதிவாளருக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மோப்ப நாய் மற்றும் நிபுணர் குழுவுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications