தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறிப்போன புஸ்ஸி ஆனந்த்.. பனையூரில் பரபரப்பு!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இடங்கள், திரைப் பிரபலங்களின் வீடுகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சோசியல் மீடியா மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்தது.

டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், காவல்துறையினர் உடனடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அது புரளி என்று கண்டுபிடிப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இரவு நேரத்தில் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அடுத்த 30 நிமிடங்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து அடுத்த சில நிமிடங்களிலேயே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்டார். இதன்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று நிபுணர்கள் கண்டுபிடித்த பின்னரே, அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக பனையூரில் சில மணி நேரங்களாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications