Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீதேவி சொத்து.. போனி கபூர் போலி ஆவணம் மூலம் பட்டா பெயர் மாற்றம்.. எதிர்மனுதாரர் சிவகாமி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: போனி கபூர் போலி ஆவணங்கள் வைத்து பட்டா ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துள்ளார். சம்பந்த முதலியார் பேத்தி என்ற முறையான ஆவணங்கள் உள்ளது, அவரின் மகள் மற்ற பிள்ளைகள் சொத்தை சேர்த்து விற்பனை செய்துள்ளார் அதற்கு உரியவர்கள் சேர்ந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம் என போனி கபூர் தொடர்ந்துள்ள வழக்கின் எதிர் மனுதாரர் சிவகாமி என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில் முன்பு மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்து அபகரிப்பு விவகாரம் தொடர்பாக கணவர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் எதிர் மனுதாரர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளார்.

Boney Kapoor has changed his name in the patta deeds using fake documents sivakami

கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருவதாகவும் முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது.

எனவே, மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று ஶ்ரீ தேவி கணவர் போனி கபூர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வாரங்களில் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவி சொத்தை வாங்கிய சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவியின் மகள் புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், 266 ஏக்கர் 1947 ஆம் ஆண்டு சம்பந்த முதலியார் பெற்ற சொத்து. அவருக்கு ஐந்து மகன்கள் என் தந்தை இரண்டாவது மகன். என் தாத்தாவின் வாரிசுகளில் ஒருவரான ராணியம்மாள் ECR யில் 4 ஏக்கர் 17 சென்ட் இருந்த இடத்தை மற்றவர்கள் கவனம் இல்லாமல் விற்பனை செய்துள்ளார். அதை சரியாக விசாரிக்காமல் நடிகை ஶ்ரீ தேவி வாங்கியுள்ளார். 35 ஆண்டுகளாக பட்டாவை பெயர் மாற்றம் அவர்களால் செய்ய முடியவில்லை.

ஸ்ரீதேவி உயிரிழந்த பின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இல்லாமல் போனி கபூர் போலியான சான்றிதழ் மூலம் பட்டாவை பெயர் மாற்றம் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாற்றம் செய்யும் முறை இது தொடர்பான விஷயங்கள் எங்கள் கவனத்திற்கு வரவில்லை.

உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் நான் போட்ட போது 12 வாரத்தில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது போனி கபூர் பெட்டிஷன் போட்டு இருக்கிறார். இதற்கு நான்கு வாரங்களில் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.

முறையாக விசாரித்தால் அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது நிச்சயம் அதை சமர்ப்பிப்பேன். போனி கபூரிடம் எந்தவிதமான ஆவணமும் இல்லை. இதற்கிடையில் போனி கபூர் இந்த இடத்தை விற்க பார்க்கிறார். எங்களுக்கு உரிமை உள்ள சொத்தில் முழுமையான தீர்ப்பு கிடைக்கும் வரை போனி கபூர் இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது" இவ்வாறு கூறியுள்ளார். முழு பேட்டியை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+