சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணவர் சென்றவுடன் கள்ளகாதலனுடன் உல்லாசம்.. போட்டு கொடுத்த அக்கம்பக்கத்தார்.. அடித்தே கொன்ற தம்பி!

Google Oneindia Tamil News

சென்னை: எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் இருந்த அக்காளை அவரது தம்பி அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (29). நேற்று முன் தினம் இரவு விஜயகுமார் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (26). இவர் சுப்புலட்சுமியின் தம்பி. தனது அக்காவை பார்க்க சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளார்.

வாழ்நாளில் மறக்க முடியாத சென்னை மழை.. இதுபோன்ற அடைமழையை இனி எப்போது பார்ப்போம்?.. வெதர்மேன்வாழ்நாளில் மறக்க முடியாத சென்னை மழை.. இதுபோன்ற அடைமழையை இனி எப்போது பார்ப்போம்?.. வெதர்மேன்

 பிரதாப் கதவை தட்டினார்

பிரதாப் கதவை தட்டினார்

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பிரதாப் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து சுப்புலட்சுமி கதவை திறந்தார். அப்போது அவர் பதற்றமாக இருந்தார். இதனால் சந்தேகமடைந்த பிரதாப், சுப்புலட்சுமியிடம் விசாரித்தார். ஆனால் அவரோ மழுப்பலாக பதில் அளித்தார்.

 கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன்

கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன்

பின்னர் வீட்டுக்குள் சென்ற பிரதாப் அங்கும் இங்கும் சுற்றி சுற்றி பார்த்துள்ளார். அப்போது கட்டிலுக்கு அடியில் ஜானகி ராமன் என்பவர் இருந்தது தெரியவந்தது. அவரை இழுத்து போட்டபிரதாப் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் ஜானகிராமன் தப்பியோடிவிட்டார். என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட பிரதாப், சுப்புலட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார்.

 கொலை

கொலை

பின்னர் அருகில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் சுப்புலட்சுமிக்கு ஜானகிராமனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்துவந்ததாம். விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு ஜானகிராமன் சென்று உல்லாசமாக இருப்பது வழக்கமாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் விஜயகுமாரிடமும் பிரதாப்பிடமும் தெரிவித்துள்ளனர். இருவரும் சுப்புலட்சுமியை எச்சரித்து கண்டித்துள்ளனர். எனினும் கணவருக்கும் தம்பிக்கும் தெரியாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். சம்பவத்தினத்தன்று ஜானகிராமன் சுப்புலட்சுமியின் வீட்டுக்குச் செல்வதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு பிரதாப்பிடம் தெரிவித்தனர்.

 தம்பியிடம் சிக்கிய அக்காள்

தம்பியிடம் சிக்கிய அக்காள்

இதனால் பிரதாப் தான் வருவதை சுப்புலட்சுமியிடம் சொல்லாமல் திடீரென வந்துள்ளார். அப்போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த போது சிக்கிக் கொண்டார். இதையடுத்து பிரதாப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடித்தனர்.

English summary
Brother beat his sister to death in Chennai Ennore because of her illegal relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X