எல்லா தரப்பு மக்களுக்குமானது.. யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட்.. வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று பாஜக மகளிர் அணி மாநில தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக மகளிர் அணி மாநில தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசம் கூறியுள்ளதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்கும், 2047ல் இந்தியாவை முதல் பொருளாதார நாடாக்கும் இலக்கை அடையும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் இது.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

தொடர்ந்து 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து பெருமை சேர்த்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன். கல்வி, விவசாயம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை என அனைத்து துறை வளர்ச்சியை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி இல்லை. வருமான வரி தாக்கலை எளிதாக்க புதிய சட்டம். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் மாதச் சம்பளம் பெறும் நடுத்தர மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும்.

புற்றுநோய் உள்ளிட்ட அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோயாளிகளைப் பராமரிக்க 'டே கேர் கேன்சர் மையங்கள் மக்களின் மருத்துவ செலவுகளை குறைக்கும். லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு, பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை, தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிப்பு, ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள், காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க, சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம், கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன், கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்புகள்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும், ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு, அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள், செயற்கை நுண்ணறிவை கல்வியை ஊக்குவிக்க ரூ.500 கோடியில் மையம், அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் 'அடல் ஆய்வகங்கள், 5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள், பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை போன்ற அறிவிப்புகள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி நாட்டின் வளர்ச்சியை வேகமெடுக்கச் செய்யும்.

அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+