Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் அருகே  10 வருடமாக விற்காத வீட்டுமனைகள்.. மாற்றி யோசித்த பில்டர்.. அடுத்து ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செங்கல்பட்டு தாம்பரம் இடையே ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் கூடுவாஞ்சேரி வரை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டன. அதன்பிறகு உள்ள காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு வரை ரியல் எஸ்டேட் வளர்ந்து வருகிறது. இதில் ஒரு பகுதியில் பல நாட்களாக வாங்குவதற்கு ஆளே இல்லாமல் ஒரு பகுதி கிடந்தது. ஆனால் அதனை வாங்கிய பில்டர் ஒருவர், மாற்றி யோசித்த காரணத்தால், இன்று நிலத்தை வாங்க மக்கள் போட்டி போடுகிறார்கள்.

சென்னை அருகே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் இருந்ததை விட கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்த பின்னர் மாறிவிட்டது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையமும் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிலத்தின் மதிப்பு முன்பை விட வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே செங்கல்பட்டு வரை மின்சார ரயில் இருப்பதால், அதுவும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரிக்க காரணமாகி விட்டது.

Builder who cleverly sold unsold plots near Tambaram that had no buyers for 10 years

சென்னையில் இடமே இல்லை

சென்னையை பொறுத்தவரை எங்குமே பிளாட் போட்டு விற்கும் அளவிற்கு இடமே கிடையாது.செங்கல்பட்டு மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தான் இடம் உள்ளது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட செங்கல்பட்டு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அசுர வேகத்தில் இருக்கிறது.

ஏன் விரும்புகிறார்கள்

குறிப்பாக தாம்பரம் டூ செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் டூ திருப்போரூர், கேளம்பாக்கம் டூ கிளாம்பாக்கம், தாம்பரம் டூ ஒரகடம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக செல்வது என்றால், தாம்பரம் டூ செங்கல்பட்டு தான் மக்களின் தேர்வாக உள்ளது. ஏனெனில் மின்சார ரயில், ஜிஎஸ்டி ரோடு ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தாம்பரம் செங்கல்பட்டு

அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பும் இந்த பகுதியில் வளர்ச்சி அதிகமாக இருந்தது என்றாலும், இப்போது தேவை அதிகமாகி உள்ளதால், பலரும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே தான் இடம் வாங்கி தனி வீடு கட்ட ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஏனெனில் இடம் வாங்கி தனி வீடு கட்டுவது என்பது கிட்டத்தட்ட லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவோருக்கு கூட எளிதானது கிடையாது. அந்த அளவிற்கு இடத்தின் மதிப்பு அதிகம். அடுக்குமாடியில் தான் குடியேறவே முடியும்.

எப்படி விரும்புகிறார்கள்

என்ன தான் தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே மக்களின் ஆர்வம் அதிகம் என்றாலும், எல்லாரும் ஜிஎஸ்டி சாலையில் இருந்து அதிகபட்சம் 2 கிலோ மீட்டருக்குள்,அதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இடத்தை பார்க்கிறார்கள்.. அப்படிப்பட்ட இடங்களில் இடம் வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.அதேநேரம் கடந்த 2008ம் ஆண்டு போடப்பட்ட வீட்டு மனை ஒன்று கிட்டத்தட்ட 12 வருடங்களாக சரியாக விற்காமலேயே இருந்துள்ளது. அதனை சதுர அடி 1000 க்கு வாங்க யாருமே முன் வராத அளவுக்கு தான் ஒரு காலத்தில் இருந்தது. என்ன தான் கிளாம்பாக்கம் வந்தாலும் அங்கு மட்டும் மாறாமல் இருந்தது. ஏனெனில் சரியான பாதை இல்லாமல் இருந்தது. சுற்றி செல்லும் வகையில் இருந்தது. அந்த பாதையும் அடர்ந்த வனப்பகுதி பாதை போல், ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாகவே இருந்தது.

அகலமான சாலை வசதி

பொதுவாக வீடு கட்ட இடம் வாங்குவோர், வேகமாக வளரும் பகுதியில் வாங்கவே விரும்புவார்கள். அதேநேரம் அந்த பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து இடத்திற்கு செல்ல அகலமான சரியான சாலை வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. ஏனெனில் அகலமான சாலை வசதி இல்லாத பகுதியில் வாங்கினால் பின்னாளில் சென்று வருவதற்கு சிரமம் ஏற்படும். அதேபோல் தண்ணீர் தேங்குமா என்பதை கவனிக்கவேண்டும். அதேபோல் இடம் விற்பவர் குறித்து நன்கு விசாரித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக நில ஆவணங்கள் சரியாக இருந்தால் வாங்கலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+