வெளுக்கும் மழை.. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: புரேவி புயல் கரையை கடப்பதன் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புரேவி புயல் இலங்கையில் கரையை கடந்த நிலையில் இன்று மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடப்பதால் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
Recommended Video
Burevi Cyclone நிலை என்ன? | Oneindia Tamil
சென்னையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெளுத்து வாங்கி வரும் மழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரு நாள் தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவை உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications