வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சி பூங்கா.. வண்டலூரில் மீண்டும் திறப்பு
வண்டலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மறு சீரமைப்பு முடிவடைந்து வண்ணத்து பூச்சி பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக இன்று திறந்து விடப்பட்டது.
2015 ஆண்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வண்ணத்துப்பூச்சிக்கென தனி பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இதனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

வண்ணத்துப் பூச்சி
இதில் பிரத்யேகமாக பூங்காவில் 200 வகையான தாவரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டது. அந்த பூங்காவில் 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்கின்றன என்றும், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் இந்த வண்ணத்துப்பூச்சிகள் வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

சீரமைப்பு பணிகள்
ஆனால் 2016 -ல் வந்த வர்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா அடியோடு சேதமடைந்தது. மேலும் அதற்காக அமைக்கப்பட்ட இல்லமும் வெகுவாக
பாதிக்கப்பட்டது. இதனால் வண்ணத்துப் பூச்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன.

இன்று திறக்கப்பட்டது
இதற்காக வண்ணத்து பூச்சி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பூங்கா இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதற்காகவே புதிதாக செடிகளும் நடப்பட்டு உள்ளன. தற்போது வண்ணத்துப்பூச்சிகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கி இருக்கின்றன.

வட்டமிடுகின்றன
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் இந்த பூங்காவில், கண்ணை கவரும் வகையில் வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவை வட்டமிட்டு வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications