திமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்
Recommended Video
சென்னை: எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் ராஜினாமாவால் சட்டமன்றத்தில் திமுக அணியின் பலம் 109 ஆக குறைகிறது. திமுக ஆதரவுடன் மீண்டும் நாங்குநேரியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதே நேரம், ஆளுங்கட்சியான அதிமுகவும் நாங்குநேரியை கைப்பற்ற வியூகம் வகுக்கிறது.

சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுகிறது.
234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார். இந்தநிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், எம்.பி. பதவிவை தக்க வைப்பது என முடிவு செய்துள்ளதாக கூறினார். ஏற்கனவே, பணப்பட்டுவாடா விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications