தமிழை சுவாசித்த பேரறிஞர் அண்ணா..! இபிஎஸ், ஓபிஎஸ் நெகிழ்ச்சி பதிவு

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

C.N. Annadurais 52nd death anniversary OPS and EPS Tributes

எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில் தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில், தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+