களத்தை மாற்றுகிறதா பாஜக? அதிமுக இரண்டாக உடைகிறதா? திமுக இப்படி விரட்டி விரட்டி வருதே.. என்னாக போகுதோ
சென்னை: தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று திமுக அமைச்சர் பற்ற வைத்த நெருப்பு, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே, அதிமுகவில் ஒருவித சலசலப்புகள் அதிகரித்து வந்தது.. இந்த சூழலில், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.. அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "விஜயதாரணி மட்டும் இல்லாமல், மேலும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள்" என்றார்.

பாஜக: இதனால், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்ல போவது யார் என்ற ஆர்வம் எகிறியது.. ஆனால் அண்ணாமலை சொன்னதுபோல, யாருமே பாஜகவில் இணையவில்லை.
அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை.. அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக செய்தி பரவியது.. இதற்கு அப்போதே செங்கோட்டையன் மறுத்திருந்தார்.. அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை..
நேற்று முன்தினம், திமுக அமைச்சர ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்..
பிளவு: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்" என்று அமைச்சர் கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு மீண்டும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும். சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருந்தத்தக்க ஒன்று.












Click it and Unblock the Notifications