“பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தம் கொடுத்த எடப்பாடி”.. முதல்வர் ஸ்டாலின் சரமாரி அட்டாக்!
சென்னை: “MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தனது 'Owner' பா.ஜ.க செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக VBGRAMG-யை எடப்பாடி பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா?” என்று சவால் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் தட்டி எழுப்பிய பின் துயில் கலைந்து, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, #Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGA திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது 'Owner' பா.ஜ.க செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக VBGRAMG-யை எடப்பாடி பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக விக்சித் பாரத் திட்டம் குறித்து கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
வேளாண் சட்டங்கள், CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி? MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ““2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட எக்ஸ் தள பதிவில் ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை? இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சைத் துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது?
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்." எனப் பதிவிட்டார்.
-
"ஆஃபர் கொடுத்தாவது திமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார்கள்”.. விஜய் மீது ஸ்டாலின் மறைமுக அட்டாக்! -
“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல! ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!” - ஸ்டாலின் -
ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! மே.வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் மீட்டிங் -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு -
தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின் -
மயிலம், மேட்டூர் தொகுதியை கேட்கும் அதிமுக.. சேலம், தர்மபுரியில் செக் வைத்த அன்புமணி.. என்ன நடந்தது? -
பெண்களுக்கு 2 லட்சம் தரும் தமிழக அரசு.. தொழில் தொடங்குவோர் அறிய வேண்டிய புதிய மாற்றங்கள் -
“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்! -
இந்தியாவுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா யாரு..மானத்தை காப்பாத்துங்க மோடி..ரஷ்யா விவகாரத்தில் ஸ்டாலின் -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 06/03/2026: மோடி டூ ஸ்டாலின் வரை பேசியவை என்ன? -
மீண்டும் கொங்கு பகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்பி.. தரமான சான்ஸை தவறவிட்ட எடப்பாடி!











Click it and Unblock the Notifications