வீரா.. ப்ளீஸ் வீரா... என்னை விட்டுடாதே.. கதறும் சரஸ்வதி.. போலீஸுக்கு வந்த காதல் சண்டை.. விசாரணை
போலீஸ்காரர் என்னை மிரட்டுகிறார் என்று இளம்பெண் புகார் அளித்துள்ளார்
சென்னை: "ப்ளீஸ் வீரா.. என்னை கல்யாணம் செய்துக்கோ" என்று பியூட்டிஷன் சரஸ்வதி கான்ஸ்டபிள் வீரமணியிடம் கெஞ்சும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், போலீசாரின் விசாரணை தீவிரமாகி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் சரஸ்வதி.. 24 வயதாகிறது.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கான்ஸ்டபிள் வீரமணி மீது ஒரு புகார் தந்திருந்தார்.
அதில், "என் வீட்டிற்கு வந்த வீரமணி குடும்பத்தினர், வீடு சிறியதாக உள்ளது.. என் மகன் சப்-இன்ஸ்பெக்டருக்கு படிக்க போறான்.. அதனால் வேறு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறோம்" என்று வீரமணியின் தந்தை மிரட்டினார்.. தன்னையே கல்யாணம் செய்வதாக சொல்லியதை நம்பி அவருடன் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டேன்.. மோசடி செய்த கான்ஸ்டபிள் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

வீரமணி
கிரவுண்டுக்கு பிராக்டிஸ் செய்ய போகும்போதெல்லாம் வீரமணியை சந்தித்துள்ளார் சரஸ்வதி.. வீரமணிதான் முதலில் வந்து சரஸ்வதியிடம் காதலை சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்து கொள்வதாக பலமுறை சொல்லி சொல்லியே இவர் மனதை கரைத்தாராம். மே 27-ம் தேதி வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஆசை வார்த்தை கூறியதால் எல்லை மீறியுள்ளார்.. இதற்கு பிறகுதான் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததாக சரஸ்வதி கூறுகிறார்.

கல்யாணம்
இதை பற்றி சரஸ்வதி மேலும் சொல்லும்போது, "என் குடும்பம் வசதியா இல்லையாம்.. இதை ஒரு சாக்காக சொல்லி கல்யாணத்தை வேணாம்னு சொல்றார்.. ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளும்படி சொல்லியும் வீரா கேட்கவில்லை.. அவருடைய அப்பாவும் போலீஸா இருந்து ரிடையர் ஆனவர்.

மிரட்டறார்
அதனால்தான் என்னால பிரச்சனையை சமாளிக்க முடியாம, சட்டரீதியாக இதை கையில் எடுத்திருக்கேன்.. நான் போலீசுக்கு போய் புகார் தந்ததும், "இப்படி புகார் பண்ணினால், ரோட்டிலேயே வெச்சு பெட்ரோல் ஊற்றி உன்னை கொளுத்திடுவேன்"னு மிரட்டறார்.. நான் செக்-அப்புக்கு கூட ரெடியாகதான் இருக்கேன்" என்று கதறி அழுகிறாராம் சரஸ்வதி.

தவறு மேல் தவறு
இதனிடையே, "நான் சரஸ்வதியை கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறேன்.. எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேசணும்னு சொல்லியும் வரல.. யாருடைய தூண்டுதலின் பேரிலோ தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார்" என்கிறார் சம்பந்தப்பட்ட வீரமணி!

ஆடியோ
அதேபோல, முழுமையான விசாரணை நடந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள சரஸ்வதி, "வீரா.. ப்ளீஸ் வீரா... என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்று கெஞ்சி கதறும் ஆடியோவையும் ஒப்படைத்துள்ளாராம். இதில் யார் மீது தவறு உள்ளது என்று தெளிவாக தெரியவில்லை.. எனினும், இது சம்பந்தமான விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications