Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ் பேக் அறிவித்த ரயில்வே! யுடிஎஸ் ஆப் வச்சிருக்கீங்களா.. உடனே இத பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை புக் செய்ய ரயில்வேயின் யுடிஎஸ் செயலி முக்கிய பங்காற்றுகிறது. இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளையும் எடுக்க முடியும். இந்த யுடிஎஸ் செயலியில் ஆர் வேலட் அல்லது ஏடிவிஎம் மூலம் டிக்கெட் புக் செய்தால் 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டிசியில் முன்பதிவு செய்வதை போல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையில் எடுக்கும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்காக யூடிஎஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில்களை போல புறநகர் மின்சார ரயில்களிலும் இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Railway UTS app R Wallet

சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலானா பயணிகள் இந்த யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தே பயணிப்பதை பார்க்க முடிகிறது. கவுண்டர்களில் போய் டிக்கெட் எடுத்தால் காத்திருக்க வேண்டும். சில்லரை பெறுவதில் பிரச்சினை போன்றவற்றை தவிர்க்கும் விதமாக பலரும் யுடிஎஸ் செயலியை பயன்படுத்துகின்றன. தற்போது யுடிஎஸ் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதேவேளையில் இன்னும் பல பயணிகள் யுடிஎஸ் செயலியை பயன்படுத்தாமல் நேரில் சென்று டிக்கெட் எடுப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்கள். அவர்களையும் யுடிஎஸ் செயலியை பயன்படுத்த வைக்கும் நோக்கத்தில் சில சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அதேபோல ரயில்வே வாலட் பயன்படுத்தி டிக்கெட் எடுப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக டிஸ்கவுண்ட்டுகளை ரயில்வே அறிவித்து வருகிறது.

யுடிஎஸ்களில் டிக்கெட் எடுக்கும் போது சில நேரங்களில் டிக்கெட் கட்டணம் பிடிக்கப்பட்டாலும் டிக்கெட்டுகள் வருவதில்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. ரயில்வே வாலட்டில் பணத்தை சேமித்து வைத்து டிக்கெட் புக் செய்தால் வேகமாகவும் டிக்கெட் வராமல் போகும் பிரச்சினை இருக்காது எனவும் சொல்லப்படுகிறது.

ஐ.ஆர்சிடிசி கணக்கு விவரங்களை போல போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை வழங்கி ரயில்வே வேலட்டினை பயணிகள் தொடங்கலாம். இந்த வேலட்டில் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். டிக்கெட் எடுக்கும் போது வாலட்டில் உள்ள பணத்தை செலுத்த முடியும். இதற்கு ரீசார்ஜ் செய்யும் போது 3 சதவீத சலுகை வழங்கப்பட்டுவந்தது.

தற்போது, யுடிஎஸ் மொபைல் ஆப் அல்லது ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஏடிவிஎம் மூலம் டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகையானது எல்லா வகை முன்பதிவு டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை, ரயில்வேயின் யூடிஎஸ் செயலியில் உள்ள ஆர் வேலட் அல்லது ஏடிவிஎம் மூலம் வாங்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+