கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு! 3 மாதத்தில் முடிக்கப்படும்! ஹைகோர்ட்டில் சிபிஐ தகவல்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், விஷசாராயம் தொடர்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கபடும் எனவும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கபட்டது.
மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதி வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளனர்? என்பது தொடர்பாக பதிலளிக்க சிபிஐ தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications