சென்னையில் சிபிஐ ரெய்டு.. பிரபல வங்கியின் முன்னாள் அதிகாரி வீட்டில் பரபர சோதனை.. பின்னணி என்ன?
சென்னை: சென்னையில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்து சி.பி.ஐ சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சிபிஐ ரெய்டுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை கே.கே.நகர், சத்யா கார்டன் பகுதியில் உள்ள கங்கா யமுனா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ராதாகிருஷ்ணன் கடந்த 9 மாதங்களாக சென்னை கே.கே.நகரில் உள்ள கங்கா யமுனா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை அதிரடியாக நுழைந்த சி.பி.ஐ அதிகாரிகள் அங்கு தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ராதாகிருஷ்ணன், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தொழிலதிபராக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் இன்று திடீரென அவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் வசித்து வரும் முன்னாள் வங்கி அதிகாரியும், தொழிலதிபருமான ராதாகிருஷ்ணன் வீட்டில் இந்த சிபிஐ சோதனை எதன் அடிப்படையில் என்ற விவரம் எதுவும் வெளியாகாததால் திடீர் ரெய்டு காரணமாக சென்னை கே.கே.நகர் பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், சிபிஐ ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராதாகிருஷ்ணன், விசாகப்பட்டினம் யூகோ வங்கியில் உதவி பொது மேலாளராக பணியாற்றியபோது, 2009-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகவே 2009-2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இவர் பணியில் இருந்த போது முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் சென்னை கே.கே.நகரில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டில் தினேஷ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்பட ஐந்து இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதாகிருஷ்ணன், வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபராக வலம் வருவதாக கூறப்படுகிறது. அவர் அதிகளவில் முதலீடுகள் செய்துள்ளதாகவும், அந்த பணம் எப்படி வந்தது என்ற அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications